சி.ஏ.ஏ.வுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற கோரி மத்திய அரசு மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக (சி.ஏ.ஏ.) தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மத்திய அரசு இன்று மனுத் தாக்கல் செய்துள்ளது.

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்திலும் 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன.

Centre moves SC to transfer pleas against CAA from high courts

கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நேற்று சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, இவ்விவகாரத்தில், உயர்நீதிமன்றங்களில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.

இதேபோல் டெல்லி உயர்நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றங்களிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனையடுத்து இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டேவிடம் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இம்மனுவை வரும் வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி போப்டே தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+