தமிழகத்தில் இடியுடன் மழை பெய்யும்.. அனல் காற்றும் வீசும்.. வானிலை மையம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் கடந்த சில நாட்களாக கொளுத்தி வருகிறது. திருத்தணியில் இன்று அதிகபட்சமாக 110 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. கடந்த சில நாட்களாகவே அங்கு 109, 110 என்ற அளவில் வெயில் காணப்படுகிறது.

chance of thunderstorms at next 24 hours in many places in tamil nadu

சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட், திருச்சியில் 104 டிகிரி பாரன்ஹீட், மதுரையில் 102 டிகிரி பாரன்ஹீட், சேலத்தில் 101 டிகிரி பாரன்ஹீட், நெல்லையில் 104 டிகிரி பாரன்ஹீட், கோவையில் 96 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. அதேநேரம் மலைப்பிரதேசங்களான ஊட்டியில் குறைந்த பட்சமாக 70 டிகிரி பாரன்ஹீட்டும், கொடைக்கானலில் 73 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பாதிவாகி காணப்படுகிறது.

உள் தமிழக மாவட்டங்களை பொறுத்தவரை அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 8 சென்டிமீட்டரும், வேலூரில் 5 சென்டிமீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டம் பேனுகொண்டபுரத்தில் 3 சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளது.

சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியசும் பதிவாகும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+