மோடி பிரதமராவதில் சிக்கல்? ரயில்வே, உள்துறை, நிதித் துறையை தூக்கும் நாயுடு? மாட்டிக்கிட்ட பாஜக
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் சந்திரபாபு நாயுடு முக்கியமான சில துறைகளை பாஜகவிடம் கேட்க உள்ளாராம்.
2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 240 இடங்களில் பாஜக வென்றுள்ளது. பாஜக ஆட்சி அமைக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை. இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை.

இவர்களின் ஆதரவு எல்லாம் இருந்தால்தான் பாஜக ஆட்சி அமைக்க முடியும். இனிமேல் இவர்கள் சொல்வதுதான் சட்டம் என்ற நிலைமை பாஜகவிற்கு ஏற்பட்டு உள்ளது.
பாஜக மெஜாரிட்டி இல்லை: 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் இன்னும் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
சந்திரபாபு நாயுடு - நிதிஷ் கிங்: இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு - நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும்.
பாஜக ஆட்சி அமைக்க பீகாரில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 12 எம்பிக்கள் உள்ளனர். பாஜக ஆட்சி அமைக்க ஆந்திர பிரதேசத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 16 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு இன்றி பாஜக ஆட்சி அமைக்க முடியாது.
என்ன கோரிக்கை: இதுவரை நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவிற்கு ஆதரவு தரவில்லை. பாஜக ஆட்சிக்கு ஆதரவு தருகிறோம், மோடி ஆட்சி அமைக்க ஆதரவு தருகிறோம் என்று சொல்லவில்லை. முக்கியமாக நிதிஷ் குமார் இதுவரை மோடிக்கு ஆதரவு தருவேன் என்றும் கூறவில்லை. மோடி ஆட்சி அமைக்க நிதிஷ் தனி ஆதரவு கொடுப்பாரா என்பதே கேள்வியாக உள்ளது.
நாயுடு கோரிக்கை: இப்படிப்பட்ட நிலையில்தான் இன்று டெல்லிக்கு போகும் முன்பே நாயுடு பாஜகவிடம் சில கோரிக்கைகளை வைத்துவிட்டாராம்.
அதில் நிதி துறை அல்லது பாதுகாப்பு துறையை நாயுடு கேட்டுள்ளார். அதோடு துணை பிரதமர் பதவி வேண்டும். மேலும் ரயில்வே அல்லது சாலை போக்குவரத்து துறையில் ஒன்று வேண்டும் என்று கேட்க நாயுடு ஆலோசனை செய்துள்ளாராம்.
இது போக நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவிற்கு ஆதரவு தரவில்லை. அவர் பெரும்பாலும் மோடி பிரதமராக வேண்டாம் என்று கூட சொல்ல வாய்ப்பு உள்ளதாம். நிதிஷ் தனக்கு பிரதமர் பதவியை கேட்க நினைப்பார். அப்படி இல்லையென்றால் துணை பிரதமர் + மோடி அல்லாத ஒருவர் பிரதமர் என்ற கோரிக்கையை நிதிஷ் வைப்பார் என்று கூறப்படுகிறது.
என்ன நடந்தாலும் பாஜகவிற்கு இனி வெற்றிகரமான நாட்கள் இல்லை .. அதனால்தான் மோடியும் நேற்று முகம் வாடி இருந்தார். இதை உணர்ந்தே பாஜகவும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் உடைந்து போய் இருக்கிறது.
-
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
அண்ணாமலைக்கு புதிய ‘ரோல்'..தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கொடுத்த முக்கிய ‘அசைன்மென்ட்' -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications