சிக்னல் கிடைக்குமா? நிலவில் லேண்டர், ரோவர் கண்விழிக்காவிட்டால்.. அடுத்த என்ன நடக்கும்? இத படிங்க
சென்னை: நிலவில் உறக்க நிலையில் உள்ள சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவற்றை மீண்டும் செயல்பாட்டு கொண்டு வர இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். தற்போது வரை சிக்னல் கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் ஒருவேளை விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வரமுடியாவிட்டால் என்ன நடக்கும்? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
நிலவில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா விண்கலங்கள் தரையிறங்கி உள்ளன. இதற்கு அடுத்தப்படியாக இந்தியாவின் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்தியாவின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது.

இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்ற மகத்தான சாதனை படைக்கப்பட்டது. அதாவது ஆகஸ்ட் 17 ம் தேதி உந்துவிசை கலனில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் ‛சாப்ட் லேண்டிங்' முறையில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
அதன்பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து திட்டமிட்டப்பட்டி பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறங்கியது. நிலவின் மேற்பரப்பில் இஸ்ரோ மற்றும் இந்திய தேசியக்கொடி, இஸ்ரோவின் அடையாளத்தை பதித்து ரோவர் ஆய்வு செய்தது. ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், அயர்ன் உள்பட 8 வகையான தனிமங்கள் இருப்பதை உறுதி செய்யப்ட்டது. அதோடு நிலவின் தென்துருவம் தொடர்பான படங்களை இஸ்ரோவுக்கு அனுப்பியது.
மேலும் திட்டமிட்டப்படி விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவை வெற்றிகரமாக தங்களின் பணியை செய்து முடித்தன. இதையடுத்து நிலவில் 14 நாட்கள் இருள் தொடங்கியது. இதையடுத்து லேண்டர், ரோவர் செயல்பாட்டை நிறுத்தி வைத்து மீண்டும் நிலவில் பகல் தொடங்கும்போது செயல்பாட்டு கொண்டு வர இஸ்ரோ முடிவு செய்தது. லேண்டர், ரோவர் ஆகியவற்றின் ஆயுட்காலம் என்பது 14 நாட்கள் தான் என்றாலும் இந்த முயற்சி கைக்கூடினால் அது போனஸாக அமையும் என இஸ்ரோ தெரிவித்தது.
இதையடுத்து கடந்த 2ம் தேதி ரோவரும், கடந்த 4ம் தேதி விக்ரம் லேண்டரும் தூக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இருகருவிகளிடம் இருந்த டேட்டாக்களை முழுமையாக இஸ்ரோ கைப்பற்றிய நிலையில் இரு ஆய்வு கருவிகளும் செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது நிலவில் சூரியஒளி பட்டு மீண்டும் பகல் பொழுது தொடங்கியது.
இதையடுத்து கடந்த 22ம் தேதியில் லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. தற்போது வரை விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரிடம் இருந்து சிக்னல் பெறுவதற்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். நிச்சயம் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதித்து காட்டுவார்கள் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது.
இத்தகைய சூழலில் தான் ஒரு கேள்வி எழுந்துள்ளது. அதாவது துரதிர்ஷ்டவசமாக விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரிடம் இருந்து சிக்னலை பெற முடியாவிட்டால் இஸ்ரோ என்ன செய்யும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அதாவது விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவற்றிடம் இருந்து சிக்னல் பெற முடியாவிட்டால் அது நிலவுக்கான இந்திய தூதராக மாற்றப்படும் என கூறப்படுகிறத. அதாவது நிலவில் இந்தியா கால்பதித்து விட்டதன் அடையாளமாக விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் அங்கேயே இருக்கும் என இஸ்ரோ தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications