சென்ட்ரல் டூ ஆவடி, அரக்கோணம் போறீங்களா! இத நோட் பண்ணுங்க.. ரயில்வே நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையேயான ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், புறநகர் ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1930ம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுவிட்டது. இந்த ரயில்கள் 4 பிரதான வழித்தடங்களில் 6 இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதாவது,

சென்னை சென்ட்ரல் - திருவொற்றியூர் - எண்ணூர் - பொன்னேரி - கும்மிடிப்பூண்டி - சூலூர்பேட்டை - நெல்லூர் இணைப்பு (176 கி.மீ.), சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூலம் - தாம்பரம் - திருமால்பூர் - தக்கோலம் - அரக்கோணம் இணைப்பு. (122.71 கி.மீ.), சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூலம் - தாம்பரம் - செங்கற்பட்டு - மேல்மருவத்தூர் - திண்டிவனம் - விழுப்புரம் இணைப்பு (163 கி.மீ.), சென்னை சென்ட்ரல் - அம்பத்தூர் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - திருத்தணி - ரேணிகுண்டா - திருப்பதி இணைப்பு. (151 கி.மீ.), சென்னை சென்ட்ரல் - அம்பத்தூர் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - காட்பாடி - வேலூர் கண்டோன்மண்ட் - ஆரணி - திருவண்ணாமலை - திருக்கோவிலூர் - விழுப்புரம் இணைப்பு (290 கி.மீ.), சென்னை சென்ட்ரல் - அம்பத்தூர் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - காட்பாடி - ஜோலார்பேட்டை இணைப்பு (213 கி.மீ.) என மொத்தம் 896 கி.மீ தொலைவுக்கு புறநகர் ரயில்கள் இயக்கப்படுகிறது.
இதில் சென்னை சென்ட்ரல் - அம்பத்தூர் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் வரை இயக்கப்படும் புறநகர் ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பாதையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலிருந்து இரவு 21.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43130) செவ்வாய், வியாழக்கிழமைகளில் (ஜூன் 6,8) ஆவடியுடன் நிறுத்தப்படும். ஆவடி-சென்ட்ரல் இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அரக்கோணத்திலிருந்து அதிகாலை 4 மணிக்கு வேளச்சேரி செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43932) புதன், வெள்ளிக்கிழமைகளில் (ஜூன் 7,9) ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணம் - சென்னை கடற்கரை இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்துச் செய்யப்படுகிறது. அதேபோல வேளச்சேரியிலிருந்து இரவு 10.30 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43799) வியாழக்கிழமை (ஜூன் 8) சென்னை கடற்கரையுடன் நிறுத்தப்படும். சென்னை கடற்கரை - பட்டாபிராம் திங் மிலிட்டரி சைடிங் இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலிருந்து இரவு 8.25 மணிக்கு வேளச்சேரி செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43794) வெள்ளிக்கிழமை (ஜூன் 9) ஆவடியுடன் நிறுத்தப்படும். ஆவடி - சென்னை கடற்கரை இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலிருந்து இரவு 10.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43132) வியாழக்கிழமை (ஜூன் 8) ஆவடியுடன் நிறுத்தப்படும். ஆவடி - சென்னை சென்ட்ரல் இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரம் பின்வருமாறு, சென்னை சென்ட்ரலிருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43001) புதன்கிழமை (ஜூன் 7) முதல் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையிலிருந்து நள்ளிரவு 1.20 மணிக்கு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43801) புதன்கிழமை (ஜூன் 7) முதல் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலிருந்து இரவு 11.55 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43892) வியாழக்கிழமை (ஜூன் 8) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலிலிருந்து நள்ளிரவு 11.30 மணி மற்றும் 11.45 மணிக்கு செல்லும் மின்சார ரயில்கள் (வண்டி எண்கள்: 66007,43025) வியாழக்கிழமை (ஜூன் 8) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications