பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரூட்டில் ரயில் நேரத்தில் முக்கியமான மாற்றம்!
சென்னை: பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் ஏசி மின்சார ரயில்களின் சேவையில் இன்று (ஜனவரி 5 ஆம் தேதி) முதல் சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளள்ளன. இந்த வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் இதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்ல வேண்டிய ஏசி மின்சார ரயில், இனி மாலை 3.47 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு செல்ல வேண்டிய ஏசி மின்சார ரயில், இனி பிற்பகல் 3.23 மணிக்கு புறப்படும். செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு மாலை 4.30 மணிக்கு புறப்பட வேண்டிய ஏசி மின்சார ரயில் இனி, தாம்பரத்தில் இருந்து மாலை 5.55 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாகச் செங்கல்பட்டு செல்லும் மாலை நேர குளிர்சாதன வசதியுள்ள புறநகர் மின்சார ரயில், செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் வழியாக கடற்கரை செல்லும் குளிர்சாதன வசதி மின்சார ரயில், தாம்பரத்திலிருந்து பிற்பகலில் கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில் ஆகியவற்றின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 3.47 மணிக்கு புறப்படும் குளிர்சாதன வசதி மின்சார ரயில் மாலை 4.42 மணிக்கு தாம்பரத்துக்கும், செங்கல்பட்டிலிருந்து வரும் குளிர்சாதன வசதி மின்சார ரயில் மாலை 5 மணிக்கு தாம்பரத்தை வந்தடைந்து, மாலை 5.55 மணிக்கு கடற்கரைக்கு வந்து சேரும். தாம்பரத்திலிருந்து பிற்பகல் 2.28 மணிக்கு புறப்படும் குளிர்சாதன வசதி மின்சார ரயில் பிற்பகல் 3.23 மணிக்கு கடற்கரை சென்றடையும்.
சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையிலான ரயில்கள் ஊரப்பாக்கம் நிலையத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்துடன் மேலும் 9 மின்சார ரயில்களின் நேர அட்டவணையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோவை போத்தனூர் -கரூர் இடையே தனி ரயில் பாதை.. காங்கேயம்,வெள்ளக்கோவில் வழியாக அமைக்க பயணிகள் கோரிக்கை -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications