100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம்! மத்திய அரசின் சர்வாதிகாரம்! தவாக வேல்முருகன் விமர்சனம்
சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை மாற்றும் முயற்சி என்பது தலைதூக்கும் மத்திய அரசின் சர்வாதிகாரம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், தனது பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி, புதிய விதைகள் சட்டம் 2025, மின்சாரச் சட்டம் 2025, பொதுக் காப்பீட்டு திட்டத்தில் 100 விழுக்காடு அந்நிய முதலீட்டை அனுமதிப்பது, அணுசக்தித் திட்டத்தில் அந்திய நிறுவனங்களை நுழைப்பது உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வர பாசிச பாஜக அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மாற்றுவதற்கான முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது.
அதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை, பூஜ்ய பாபு சட்டம் என மாற்ற ஒன்றிய அரசு முடிவெடுத்திருக்கிறது.
மகாத்மா காந்தி பெயர் நீக்கமும், அந்தச் சட்டத்தை மாற்றி, அதை 'பூஜ்ய பாபு சட்டம்' என்று பெயரிட முடிவெடுத்திருப்பது, மகாத்மா காந்தி மீது ஒன்றிய அரசுக்கு உள்ள வெறுப்பை வெளிப்படுத்துகிறது.
தேசத் தந்தையின் பெயரை ஒரு திட்டத்திலிருந்து நீக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது. எந்தவொரு ஆளும் கட்சியும் தங்கள் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் திட்டங்களுக்கு ஏற்கனவே சூட்டப்பட்ட தலைவர்களின் பெயரை மாற்றுவது ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை.
மேலும், இந்தச் சட்டத்தில் உள்ள 'உத்தரவாதம்' என்ற வார்த்தையை நீக்கிவிட்டு வெறும் 'வேலை வாய்ப்பு' என்று மாற்றவும் ஒன்றிய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம், ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்ற சட்டப்படியான உரிமை பயனாளிகளிடம் இருந்து பறிக்கப்படும் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது.
கோடிக்கணக்கான நூறுநாள் வேலைத் திட்ட பயனாளிகளின் வயிற்றில் அடிக்கும் இந்தச் செயல் மூலம், நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிரானவர்கள் நாங்கள் என்பதை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது.
எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை மாற்ற முயற்சி செய்யும் மோடி அரசின் சர்வாதிகார போக்கை முறியடிக்க, இந்தியாவில் ஒருமித்த கருத்துள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும், ஜனநாயக அமைப்புகளையும் தமிழ்நாடு அரசு ஒன்று திரட்ட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications