100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம்! மத்திய அரசின் சர்வாதிகாரம்! தவாக வேல்முருகன் விமர்சனம்
சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை மாற்றும் முயற்சி என்பது தலைதூக்கும் மத்திய அரசின் சர்வாதிகாரம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், தனது பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி, புதிய விதைகள் சட்டம் 2025, மின்சாரச் சட்டம் 2025, பொதுக் காப்பீட்டு திட்டத்தில் 100 விழுக்காடு அந்நிய முதலீட்டை அனுமதிப்பது, அணுசக்தித் திட்டத்தில் அந்திய நிறுவனங்களை நுழைப்பது உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வர பாசிச பாஜக அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மாற்றுவதற்கான முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது.
அதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை, பூஜ்ய பாபு சட்டம் என மாற்ற ஒன்றிய அரசு முடிவெடுத்திருக்கிறது.
மகாத்மா காந்தி பெயர் நீக்கமும், அந்தச் சட்டத்தை மாற்றி, அதை 'பூஜ்ய பாபு சட்டம்' என்று பெயரிட முடிவெடுத்திருப்பது, மகாத்மா காந்தி மீது ஒன்றிய அரசுக்கு உள்ள வெறுப்பை வெளிப்படுத்துகிறது.
தேசத் தந்தையின் பெயரை ஒரு திட்டத்திலிருந்து நீக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது. எந்தவொரு ஆளும் கட்சியும் தங்கள் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் திட்டங்களுக்கு ஏற்கனவே சூட்டப்பட்ட தலைவர்களின் பெயரை மாற்றுவது ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை.
மேலும், இந்தச் சட்டத்தில் உள்ள 'உத்தரவாதம்' என்ற வார்த்தையை நீக்கிவிட்டு வெறும் 'வேலை வாய்ப்பு' என்று மாற்றவும் ஒன்றிய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம், ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்ற சட்டப்படியான உரிமை பயனாளிகளிடம் இருந்து பறிக்கப்படும் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது.
கோடிக்கணக்கான நூறுநாள் வேலைத் திட்ட பயனாளிகளின் வயிற்றில் அடிக்கும் இந்தச் செயல் மூலம், நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிரானவர்கள் நாங்கள் என்பதை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது.
எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை மாற்ற முயற்சி செய்யும் மோடி அரசின் சர்வாதிகார போக்கை முறியடிக்க, இந்தியாவில் ஒருமித்த கருத்துள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும், ஜனநாயக அமைப்புகளையும் தமிழ்நாடு அரசு ஒன்று திரட்ட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications