வௌியானது யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள்! ரிசல்ட்டை இந்த வெப்சைட்டில் தெரிந்துகொள்ளுங்கள்
சென்னை: கடந்த செப்டம்பர் 15 முதல் 24ம் தேதி வரை நடைபெற்ற யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை நடத்தி வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இத்தேர்வு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது. இதனிடையே 1,105 காலி பணியிடங்களுக்கான 2023ம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 28ம் தேதி நடைபெற்ற நிலையில் ஜூன் 12ம் தேதி அதன் முடிவுகள் வெளியாகின.

இதைத்தொடர்ந்து முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு கடந்த செப். 15, 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இது 9 எழுத்துத் தேர்வுகளை உள்ளடக்கியது. இந்த நிலையில் செப்டம்பர் 15 முதல் 24ம் தேதி வரை நடைபெற்ற யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை http://upsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
முதல்நிலைத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு செல்கின்றனர். இறுதியாக, முதன்மை மற்றும் நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இந்த தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன.
தற்போது முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் upsconline.nic.in எனும் இணையதளத்திற்கு சென்று, DAF-II விண்ணபங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கான கால அவகாசம் டிச.9-15ம் தேதி வரை வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications