அம்மோனியா காற்றில் கலந்தால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? விவரித்த வேதியியல் பொறியாளர்!
சென்னை: சென்னை எண்ணூர் உர ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் மக்கள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள நிலையில் அம்மோனியாவின் நச்சுத் தன்மை பற்றியும் அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விவரித்துள்ளா வேதியியல் பொறியாளர் சுபத்ரா ராஜேந்திரன்.
அமெரிக்காவில் பணியாற்றி வரும் இவர் காணொலி மூலம் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு;

''அம்மோனியா வாயு என்பது நச்சுத்தன்மை மிக்கது. இது காற்றில் கலந்து அதை மனிதர்கள் சுவாசிக்க நேர்ந்தால் மூச்சுத்திணறல் ஏற்படும், மயக்கம் ஏற்படும். ரொம்ப நேரம் சுவாசித்தால் நுரையீரலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி ஆக்சிஜன் இல்லாமல் செய்துவிடும். விவசாய உரத் தேவைகளுக்கு அம்மோனியா அவசியமாக திகழ்வதால் அதன் உற்பத்தி இன்னும் நாளுக்கு நாள் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை. ''
''சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அம்மோனியா என்பது தூங்கும் சிங்கம் போன்றது. அமைதியாக இருக்கும் வரை அம்மோனியாவால் எந்த பாதிப்பும் இல்லை. வெடித்துச் சிதறி காற்றில் கலக்க ஆரம்பித்தால் பாதிப்பு அதிகம். உர ஆலைகளில் உரிய பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்காமல் இருக்கும்பட்சத்தில் தான் இது போன்ற விபத்துக்கள் நிகழும்.''
''மேலை நாடுகளில் அம்மோனியா இஞ்சின்களே வரத் தொடங்கிவிட்டது. இதனால் அம்மோனியாவின் உற்பத்தியும், தேவையும் இன்னும் கூடுமே தவிர குறைய வாய்ப்பே இல்லை. ஸ்டோரேஜ் தொடங்கி டிரான்ஸ்போர்டேஷன் வரை மிகக் கடுமையாக விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இப்போது சென்னை எண்ணூரில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்களை உடனடியாக காற்றோட்ட மிக்க இடங்களுக்கு மாற்ற வேண்டும். இது தான் இப்போதைக்கு உடனடி தீர்வு.''
''அம்மோனியா காற்றில் கலந்தால் 4 முதல் 5 மணி நேரம் வரை அதன் தாக்கமும், நச்சுத் தன்மையும் இருக்கும். லேசான பாதிப்பு என்றால் மயக்கம் மட்டும் வரும். பாதிப்பு அதிகமிருந்தால் மூச்சுத்திணறலும் வரக் கூடும்.''












Click it and Unblock the Notifications