செங்கல்பட்டு டூ சென்னை! மின்சார ரயில்கள் திடீர் ரத்து! சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமா? என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மிக முக்கிய வழித்தடங்களில் இன்று ரயில்கள் இயக்கம் குறித்து, தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது.

சென்னை புறநகர் மின்சார ரயில்களின் சேவை, தவிர்க்க முடியாததாகிவிட்டன.. குறிப்பாக, சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயங்கக்கூடிய மின்சார ரயில்கள், சென்னையின் அத்தியாவசிய பயண தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

Chengalpattu chennai Electric Train service partially stopped today Major announcement by Southern Railway

இந்த மின்சார ரயில்களில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகிறார்கள்.. பஸ்ஸில் செல்வதைவிட, ரயிலில் பயணிப்பது வசதியாகவும், குறைந்த கட்டணத்தில் உள்ளதாகவும் கூறுகிறார்கள். அதனால்தான் மின்சார ரயில்களின் சேவையையும் அதிகப்படுத்த வேண்டியிருக்கிறது.

அதேபோல, ஒவ்வொரு முறையும் மின்சார ரயில்கள் செல்லும் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், இப்படி பராமரிப்புகளை மேற்கொள்ளும்போது, ரயில்கள் வசதி இல்லாமல் பயணிகள் அவதிக்கு ஆளாகிவிடுகிறார்கள்.. எனினும், ரயில் பராமரிப்பு குறித்து முன்கூட்டியே அறிவிப்புகளை வெளியிட்டு, பயணிகளை அலர்ட் செய்து வருகிறது தெற்கு ரயில்வே. அப்படித்தான் இன்றைய தினமும் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.. குறிப்பாக, சென்னை எழும்பூர் விழுப்புரம் பிரிவில், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நாளை 11 மணி முதல் 3 மணி வரை, சில ரயில்கள் பாதி வழியில் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 10.56, 11.40 மதியம் 12.40 மணிக்கு செங்கல்பட்டிற்கு இயக்கப்படும் மின்சார ரயில் சிங்கபெருமாள்கோவில் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், காலை 11.30, மதியம் 1, 1.45 மற்றும் 3.50 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து இயக்கப்படும் மின்சார ரயில் சிங்கப்பெருமாள்கோவிலிருந்து இயக்கப்படும். இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பு இதுதான்:
1 . வண்டி எண் 40523 - 9:30 மணி அளவில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரும் மின்சார ரயில் பாதி வழி நிறுத்தப்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டும் வரும்.

2 . வண்டி எண் 40527- 10:56 மணி அளவில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரும் மின்சார ரயில் பாதி வழி நிறுத்தப்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டும் வரும்.

3 . வண்டி எண் 40529- 11:40 மணி அளவில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரும் மின்சார ரயில் பாதி வழி நிறுத்தப்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டும் வரும்.

4 . வண்டி எண் 40533- 12 : 40 மணி அளவில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரும் மின்சார ரயில் பாதி வழி நிறுத்தப்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டும் வரும்.

5. வண்டி எண் 40532- 11:30 மணி அளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும்

6. வண்டி எண் 40536- 13 மணி அளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும்

7. வண்டி எண் 40538- 13:45 மணி அளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும்.

8. வண்டி எண் 40542 15 :05 மணி அளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+