16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைகாட்டி 36 வயது மணிமாறன் செய்த காரியம்.. அதிர்ச்சியில் செங்கல்பட்டு!
செங்கல்பட்டு: 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற வழக்கில் 36 வயது மணிமாறனை செங்கல்பட்டு போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர் .
Recommended Video

செங்கல்பட்டு மாவட்டம் திருமணி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர், குர்ஷத் தம்பதியினரின் 16வயது சிறுமியை காணவில்லை என கடந்த 10நாட்கள் முன்பு செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் மணிமாறன் (வயது 36) ஏற்கனவே திருமணம் ஆகிருந்த நிலையில் இவர் 16வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 10 தினங்களுக்கு முன்பு கடத்தி சென்றது தெரியவந்தது.
சிறுமியின் பெற்றோர்கள் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகாரின் அடிப்படையில் காவல்துறை செல்போனை ட்ராக் செய்ததில் கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கம் அருகே இருப்பதாக தகவல் கிடைத்தது.
உடனே அங்கு சென்ற காவல்துறையினர் சிறுமியை மீட்டு மணிமாறனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications