Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை பிரபல கல்லூரி மாணவர்கள்.. புதுச்சேரியில் அழகிளுடன் இருக்க ஆசைப்பட்டு.. இப்ப புழல் சிறையில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்படும் பிரபல பொறியியல் கல்லூரியில் படிக்கும் தினேஷ்குமார், அப்சர் அலி, வசந்தகுமார் ஆகிய 3 மாணவர்கள் கடந்த சனிக்கிழமை அன்று புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலாவை அழகிகளுடன் கொண்டாட அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்காக 'ஆன்லைன்' மூலம் ஒன்றரை லட்சம் பணம் தந்துள்ளனர். ஆனால் விபச்சார புரோக்கர் அவர்களை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த மாணவர்கள், அடுத்து செய்த வேலையால் தற்போது புழல் சிறையில் இருக்கிறார்கள்.

சென்னையில் போலீசார் விபச்சாரத்திற்கு எதிராக என்ன தான் கடுமையாக நடவடிக்கை எடுத்தாலும், விபச்சாரம் செய்வோரும், விபச்சார புரோக்கர்களும் புதிது புதிதான முறைகளில் ஈடுபடுகிறார்கள். ஒரு இடத்தில் கைது செய்யப்பட்ட பெண்கள், காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்கள் சில நாளில் சொந்த ஊரில் சென்றுவிட்டு, மீண்டும் வேறு ஊரில் அல்லது வேறு இடத்தில் இருந்து விபச்சாரத்தில் ஈடுபடுவது நடக்கிறது.

Chennai 3 engineering students arrested for kidnapping prostitution broker over money dispute

விபச்சார புரோக்கர்களுமே ஜாமீனில் வெளியே வந்து வழக்கம் போல், வேறு பகுதிகளில் தங்கள் வேலைகளை செய்கிறார்கள். அது சென்னையில் மட்டுமல்ல பல பகுதிகளிலும் இதுதான் நிலைமையாக உள்ளது. அதேநேரம் மசாஜ் சென்டர்கள், அடுக்குமாடி வீடுகள், ஓட்டல்களில் அடிக்கடி விபச்சார தடுப்பு போலீசார் ரெய்டு நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி ரெய்டில் சிக்கும் புரோக்கர்களை கைதும் செய்கிறார்கள். இந்நிலையில் ஆன்லைன் விபச்சாரத்திலும் சில கும்பல்கள் ஈடுபடதொடங்கியுள்ளன.

சென்னையில் செயல்படும் பிரபல பொறியியல் கல்லூரியில் படிக்கும் தினேஷ்குமார், அப்சர் அலி, வசந்தகுமார் ஆகிய 3 மாணவர்கள் கடந்த சனிக்கிழமை அன்று புதுச்சேரிக்கு உல்லாச சுற்றுலா சென்றுள்ளார்கள். உல்லாச சுற்றுலாவை அழகிகளுடன் கொண்டாட அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். இதற்காக 'ஆன்லைன்' மூலம் ஒன்றரை லட்சம் லட்சம் பணம் அனுப்பி 4 விபசார அழகிகளை அனுப்புமாறு முன்பதிவு செய்திருந்தார்களாம்.

ஆனால் 'ஆன்லைன்' மூலம் பணத்தை பெற்றுக் கொண்ட விபசார தரகர் அழகிகளை அனுப்பி வைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் அழகிகள் வேண்டும் அல்லது பணத்தை திருப்பி தர வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் 3 பேரும் கோபத்துடன் வந்து எழும்பூரில் வசிக்கும் விபசார தரகரிடம் தகராறில் ஈடுபட்டார்களாம். அப்போது கோபத்தில் மாணவர்கள் 3 பேரும் தரகரை அடித்து- உதைத்து காரில் கடத்தி சென்றுவிட்டதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக எழும்பூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடத்தியதாக புகார் கூறப்பட்ட தரகர் மீட்கப்பட்டார். மாணவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+