சென்னை பிரபல கல்லூரி மாணவர்கள்.. புதுச்சேரியில் அழகிளுடன் இருக்க ஆசைப்பட்டு.. இப்ப புழல் சிறையில்!
சென்னை: சென்னையில் செயல்படும் பிரபல பொறியியல் கல்லூரியில் படிக்கும் தினேஷ்குமார், அப்சர் அலி, வசந்தகுமார் ஆகிய 3 மாணவர்கள் கடந்த சனிக்கிழமை அன்று புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலாவை அழகிகளுடன் கொண்டாட அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்காக 'ஆன்லைன்' மூலம் ஒன்றரை லட்சம் பணம் தந்துள்ளனர். ஆனால் விபச்சார புரோக்கர் அவர்களை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த மாணவர்கள், அடுத்து செய்த வேலையால் தற்போது புழல் சிறையில் இருக்கிறார்கள்.
சென்னையில் போலீசார் விபச்சாரத்திற்கு எதிராக என்ன தான் கடுமையாக நடவடிக்கை எடுத்தாலும், விபச்சாரம் செய்வோரும், விபச்சார புரோக்கர்களும் புதிது புதிதான முறைகளில் ஈடுபடுகிறார்கள். ஒரு இடத்தில் கைது செய்யப்பட்ட பெண்கள், காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்கள் சில நாளில் சொந்த ஊரில் சென்றுவிட்டு, மீண்டும் வேறு ஊரில் அல்லது வேறு இடத்தில் இருந்து விபச்சாரத்தில் ஈடுபடுவது நடக்கிறது.

விபச்சார புரோக்கர்களுமே ஜாமீனில் வெளியே வந்து வழக்கம் போல், வேறு பகுதிகளில் தங்கள் வேலைகளை செய்கிறார்கள். அது சென்னையில் மட்டுமல்ல பல பகுதிகளிலும் இதுதான் நிலைமையாக உள்ளது. அதேநேரம் மசாஜ் சென்டர்கள், அடுக்குமாடி வீடுகள், ஓட்டல்களில் அடிக்கடி விபச்சார தடுப்பு போலீசார் ரெய்டு நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி ரெய்டில் சிக்கும் புரோக்கர்களை கைதும் செய்கிறார்கள். இந்நிலையில் ஆன்லைன் விபச்சாரத்திலும் சில கும்பல்கள் ஈடுபடதொடங்கியுள்ளன.
சென்னையில் செயல்படும் பிரபல பொறியியல் கல்லூரியில் படிக்கும் தினேஷ்குமார், அப்சர் அலி, வசந்தகுமார் ஆகிய 3 மாணவர்கள் கடந்த சனிக்கிழமை அன்று புதுச்சேரிக்கு உல்லாச சுற்றுலா சென்றுள்ளார்கள். உல்லாச சுற்றுலாவை அழகிகளுடன் கொண்டாட அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். இதற்காக 'ஆன்லைன்' மூலம் ஒன்றரை லட்சம் லட்சம் பணம் அனுப்பி 4 விபசார அழகிகளை அனுப்புமாறு முன்பதிவு செய்திருந்தார்களாம்.
ஆனால் 'ஆன்லைன்' மூலம் பணத்தை பெற்றுக் கொண்ட விபசார தரகர் அழகிகளை அனுப்பி வைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் அழகிகள் வேண்டும் அல்லது பணத்தை திருப்பி தர வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் 3 பேரும் கோபத்துடன் வந்து எழும்பூரில் வசிக்கும் விபசார தரகரிடம் தகராறில் ஈடுபட்டார்களாம். அப்போது கோபத்தில் மாணவர்கள் 3 பேரும் தரகரை அடித்து- உதைத்து காரில் கடத்தி சென்றுவிட்டதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக எழும்பூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடத்தியதாக புகார் கூறப்பட்ட தரகர் மீட்கப்பட்டார். மாணவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டார்கள்.
-
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications