Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வெல்கம் டூ நம்ம ஊரு சென்னை!" 44ஆவது செஸ் ஒலிம்பியாட்.. கலக்கலான தீம் பாடல் வெளியீடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரவேற்பு பாடல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

 செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட்


செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைச் சென்னை மாமல்லபுரத்தில் தமிழ்நாடு அரசு தீவிரமாகச் செய்து வருகிறது. ஏற்பாடுகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.

 தீம் பாடல் வெளியீடு

தீம் பாடல் வெளியீடு

இந்த செஸ் செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான வரவேற்பு பாடல் இப்போது வெளியிடப்பட்டு உள்ளது. விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டர் பக்கத்தில் செஸ் ஒலிம்பியாட் பாடலை வெளியிட்டனர்.

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

வெல்கம் டூ நம்ம ஊரு சென்னை என்று தொடங்கும் இந்த தீம் பாடலில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை விளம்பரப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இந்தப் பாடலில் இடம் பெற்று உள்ளனர். முன்னதாக இந்த தீம் பாடலின் டீசல் கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

 பேருந்துகள் இலவசம்

பேருந்துகள் இலவசம்

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28 முதல் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்குவதாக அறிவித்துள்ளது. இந்த இலவச பேருந்து சேவை வரும் 25ம் தேதி முதல் ஒருமணி நேரத்துக்கு ஒரு பேருந்து சென்னை முதல் மாமல்லபுரம் வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

 சென்னை வாய்ப்பை பெற்றது எப்படி

சென்னை வாய்ப்பை பெற்றது எப்படி

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். இந்தப் போட்டிகள் முதலில் ரஷ்யாவில் தான் நடைபெற இருந்தது. இருப்பினும், உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் நடைபெற இருந்த பல சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டதைப் போலவே செஸ் ஒலிம்பியாட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டது. அப்போது தான் இந்த வாய்ப்பை சென்னை பெற்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+