சென்னையில் பயங்கரம்.. வியாசர்பாடியில் ஒரே குடும்பத்தினர் ஏழு பேருக்கு அரிவாள் வெட்டு.. ஒருவர் பலி
சென்னை: சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகரில் நேற்று இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை 4 பேர் கும்பல் சரமாரியாக வெட்டிவிட் தப்பியது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Recommended Video
சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகரில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ராஜி. வயது 45. ரிக்சா ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் உதயசூரியன் குடியிருப்பு 6வது பிளாக் அருகே ராஜீ தனது குடும்பத்துடன் நின்று பேசி கொண்டிருந்தார்.

அப்பொழுது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ராஜீயை மறைத்து வைத்திருந்த கத்தியால் சராமாரியாக வெட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தார் அதனை தடுக்க முயன்ற பொழுது அவர்களையும் அந்த கும்பல் வெட்டியுள்ளது.
இதில் ராஜீ சம்பவ இடத்திலே பலியானார். மேலும் அதனை தடுக்க சென்ற அவரது மனைவி வசந்தி உறவினர்களான சாந்தி, அருணாச்சலம், சுந்தரி, சுரேஷ், தண்டாபாணி ஆகியோர் வெட்டப்பட்டனர். காயமடைந்த அனைவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்த தகவல் அறிந்த வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் தொண்டை ராஜி, வின்சென்ட், அரி, ஜோசப், காட்டான் ராஜி ஆகியோர் சேர்ந்து ராஜியை வெட்டி கொலை செய்துள்ளனர்.

குடும்ப பகை காரணமாக வெட்டி கொலை செய்தனரா அல்லது மாமூல் தகராறில் கொலை செய்தனரா என கொலைக்காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications