Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் பிரேக்-க்கு பதில் ஆக்ஸிலேட்டரை மிதித்த டிரைவர் .. போனது உயிர்.. பதற வைத்த வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை கார் ஒன்று அதிவேகமாக சென்று பாதசாரி ஒருவர் மீது மோதியது. இதில் சாலையில் நடந்து சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

விபத்துகள் கண் இமைக்கும் நேரத்தில் நடக்கின்றன. யாரோ ஒருவர் செய்யும் சிறு தவறு அல்லது கவனக்குறைவு அல்லது அலட்சியம் மிகப்பெரிய பாதிப்பை ஒருவருக்கோ அல்லது பலருக்கோ ஏற்படுகிறது.சில நேரங்களில் மரணத்தை விளைவிக்கிறது.

Chennai : a driver stepped on the accelerator in response to the brake, one died

சென்னை போன்ற பெருநகரங்களில் இப்படிப்பட்ட விபத்துகள் தினசரி நடக்கின்றன. தண்ணீர் லாரிகள், குப்பை லாரிகள், மணல் லாரிகள், அரை பாடி லாரிகள், அரசு பேருந்துகள், பள்ளி பேருந்துகள், கார்கள் போன்றவற்றால், இருசக்கர வாகனங்களில் செல்வோர், நடந்துசெல்வோர் விபத்தில் சிக்குவது அடிக்கடி நடக்கிறது. இதில் தவறு சில நேரங்களில் இருசக்கர வாகங்களின் ஓட்டுநர்கள் மீதும், நடந்து செல்பவர்கள் மீதும் கூட இருக்கும்.

ஏனெனில் சைட் கண்ணாடி பார்க்காமல் வாகனத்தை திருப்புவதே சென்னையில் பல விபத்துகளுக்கு காரணமாக உள்ளது. அதாவது இண்டிகேட்டர் போடாமல், சைடு மிரர் பார்க்காமல் வாகனங்களை திருப்புவது விபத்தை ஏற்படுத்த முக்கிய காரணமாக இருக்கிறது.

சென்னையில் பாதசாரிகள் சாலையை கடக்கும் போது, முன்பின் பார்க்காமல் சாலையை வேகமாக கடக்க முயல்வதும் விபத்துகளுக்கு காரணமாக உள்ளது.இதேபோல் கனரக வாகனங்கள் காலையில் பீக் அவர்ஸில் வருவதும் விபத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது. பீக் அவர்ஸில் பள்ளி அல்லது அலுவலகத்திற்கு அதிவேகமாக செல்ல முயலும் போது, கனரக வாகனங்களை முந்தி செல்ல முயல்கிறார்கள். அப்படி போகும் போகும் போது விபத்தில் சிக்குவது அடிக்கடி நடக்கிறது. அல்லது கனரக வாகனங்கள் இருசக்கர வாகனங்களை முந்த முயலும் போதும் விபத்து ஏற்படுகிறது.

இது ஒருபுறம் எனில் சாலையில் உள்ள மோசமான பள்ளங்கள் காரணமாகவும் சென்னையில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இந்த சூழலில் சென்னையில் நடந்த ஒரு விபத்து வீடியோ பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை கார் ஒன்று அதிவேகமாக சென்று பாதசாரி ஒருவர் மீது மோதியது. இதில் சாலையில் நடந்து சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கீழ்ப்பாக்கத்தில் சாலையோரத்தில் பழனி என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு கார் மின்னல் வேகத்தில் வந்து பழனி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யஷ்வந்த் என்பவரும் விபத்தில் படுகாயம் அடைந்தார். கார் ஓட்டுநர் பிரேக்-க்கு பதில் ஆக்ஸிலேட்டரை மிதித்ததே விபத்திற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+