Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாடிக்கையாளரின் புத்தம் புதிய காரை.. சென்டர் மீடியனில் ஏற்றி உடைத்த சென்னை உணவக ஊழியர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் ஓட்டலுக்கு புத்தம் புதிய காரை வாடிக்கையாளர் ஓட்டி வந்த நிலையில், அந்த காரை ஓரமாக நிறுத்துவதற்காக எடுத்து சென்ற உணவக ஊழியர், சென்டர்மீடியனில் மோதி, மற்றொரு காரில் மோதி காரை உடைத்துவிட்டார்.

புத்தம் புதுசா கார் வாங்கிவிட்டு வந்து அந்த கார் உடனே உடைந்து போனாலோ, விபத்தில் சிக்கினாலோ அது கார் ஓனருக்கு தீராத வலியை ஏற்படுத்தும். அதுவும் அவர் ஓட்டாமல், சம்பந்தமே இல்லாத வேறு ஒருவர் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தினால், நொந்து போய்விடுவார். அப்படியான ஒரு சம்பவம் தான் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் நடந்துள்ளது.

Chennai Alwarpet restaurant employee wrecks customer’s brand new car

சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கா சாலை 3வது தெருவில் பிரபலமான உணவகம் ஒன்று செயல்படுகிறது. இந்த உணவகத்திற்கு கடந்த அக்டோபர் 15ம் தேதி (ஞாயிறு) அன்று இரவு 9.30 அளவில் வாடிக்கையாளர் ஒருவர் புத்தம் புதிய காரை எடுத்துக் கொண்டு வந்துள்ளார்

காரை கடையின் முன்பு நிறுத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கூறி, காரை பக்கத்து தெருவில் நிறுத்துகிறேன். அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்று கூறியிருக்கிறார் உணவக ஊழியர் காளிராஜ். இதனால் வாடிக்கையாளரும் ஆசையாய் வாங்கிய புத்தம் புதிய காருக்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்று கருதி காளிராஜிடம் சாவியை கொடுத்துள்ளார்.

உணவக ஊழியர் காளிராஜ் காரை அருகில் உள்ள தெருவில் நிறுத்தாமல், கதீட்ரல் சாலையை நோக்கி காரை ஓட்டினார் . காரை அவர் மிகவும் அலட்சியமாக வேகமாக ஓட்டிச் சென்றதால், முதலில் மற்றொரு காரின் மீது சட்டென மோதியது, பின்னர் சென்டர் மீடியனில் மோதி அதன் மீது ஏறி அபாயரகமாக தொங்கியபடி நின்றது.

உணவக ஊழியர் காளிராஜ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார், ஆனால் இந்த விபத்தில் காரின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது. மேலும் இந்த விபத்தால் கதீட்ரல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார் விபத்து ஏற்பட்டதை அடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அசோக் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் நேரில் வந்து காரை சென்டர் மீடியனில் இருந்து இறக்கி, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ஓட்டுநர் காளிராஜை கைது செய்து, அவரிடம் முறையான ஓட்டுனர் உரிமம் உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.

புத்தம் புதிய காரை ஓரமாக நிறுத்துவதாக கூறி உணவக ஊழியர் விபத்தை ஏற்படுத்தியதை கேட்டு அந்த காரின் உரிமையாளர் நொந்துபோனார். இந்த விபத்தால் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+