வாடிக்கையாளரின் புத்தம் புதிய காரை.. சென்டர் மீடியனில் ஏற்றி உடைத்த சென்னை உணவக ஊழியர்
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் ஓட்டலுக்கு புத்தம் புதிய காரை வாடிக்கையாளர் ஓட்டி வந்த நிலையில், அந்த காரை ஓரமாக நிறுத்துவதற்காக எடுத்து சென்ற உணவக ஊழியர், சென்டர்மீடியனில் மோதி, மற்றொரு காரில் மோதி காரை உடைத்துவிட்டார்.
புத்தம் புதுசா கார் வாங்கிவிட்டு வந்து அந்த கார் உடனே உடைந்து போனாலோ, விபத்தில் சிக்கினாலோ அது கார் ஓனருக்கு தீராத வலியை ஏற்படுத்தும். அதுவும் அவர் ஓட்டாமல், சம்பந்தமே இல்லாத வேறு ஒருவர் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தினால், நொந்து போய்விடுவார். அப்படியான ஒரு சம்பவம் தான் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் நடந்துள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கா சாலை 3வது தெருவில் பிரபலமான உணவகம் ஒன்று செயல்படுகிறது. இந்த உணவகத்திற்கு கடந்த அக்டோபர் 15ம் தேதி (ஞாயிறு) அன்று இரவு 9.30 அளவில் வாடிக்கையாளர் ஒருவர் புத்தம் புதிய காரை எடுத்துக் கொண்டு வந்துள்ளார்
காரை கடையின் முன்பு நிறுத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கூறி, காரை பக்கத்து தெருவில் நிறுத்துகிறேன். அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்று கூறியிருக்கிறார் உணவக ஊழியர் காளிராஜ். இதனால் வாடிக்கையாளரும் ஆசையாய் வாங்கிய புத்தம் புதிய காருக்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்று கருதி காளிராஜிடம் சாவியை கொடுத்துள்ளார்.
உணவக ஊழியர் காளிராஜ் காரை அருகில் உள்ள தெருவில் நிறுத்தாமல், கதீட்ரல் சாலையை நோக்கி காரை ஓட்டினார் . காரை அவர் மிகவும் அலட்சியமாக வேகமாக ஓட்டிச் சென்றதால், முதலில் மற்றொரு காரின் மீது சட்டென மோதியது, பின்னர் சென்டர் மீடியனில் மோதி அதன் மீது ஏறி அபாயரகமாக தொங்கியபடி நின்றது.
உணவக ஊழியர் காளிராஜ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார், ஆனால் இந்த விபத்தில் காரின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது. மேலும் இந்த விபத்தால் கதீட்ரல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார் விபத்து ஏற்பட்டதை அடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அசோக் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் நேரில் வந்து காரை சென்டர் மீடியனில் இருந்து இறக்கி, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ஓட்டுநர் காளிராஜை கைது செய்து, அவரிடம் முறையான ஓட்டுனர் உரிமம் உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.
புத்தம் புதிய காரை ஓரமாக நிறுத்துவதாக கூறி உணவக ஊழியர் விபத்தை ஏற்படுத்தியதை கேட்டு அந்த காரின் உரிமையாளர் நொந்துபோனார். இந்த விபத்தால் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications