Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை தொழிலதிபருக்கு மறக்க முடியாத பரிசு.. ஆங்கிலோ இந்திய பெண், கணவருடன் சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த சார்சல் என்ற தொழில் அதிபரை உல்லாசமாக இருக்கலாம் வாங்க, என்று அழைத்து தொழில் அதிபரை தாக்கி நகை, பணத்தை பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஆங்கிலோ இந்திய பெண்ணும், அவரது காதல் கணவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எப்படி சிக்கினார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த 50 வயதாகும் சார்லஸ் என்ற தொழில் அதிபர் தேக்குமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இவர் அண்ணா நகரில் உள்ள மசாஜ் கிளப்பிற்கு சென்று மசாஜ் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த கிளப்பில் ஆண்ட்ரியா என்ற ஆங்கிலோ-இந்திய பெண் பணியாற்றி உள்ளார். அவருடன் சார்லசுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தார்களாம்.

Chennai A Anglo-Indian woman husband caught after stealing gold jewellery from businessman

கடந்த மே மாதம் 29-ந்தேதி ஆண்ட்ரியா, தொழிலதிபர் சார்லசுக்கு செல்போனில் அழைத்து பேசினாராம். அப்போது சூளைமேட்டில் வசிக்கும் தனக்கு தெரிந்த 60 வயதாகும் ரேகா சாவித்திரி என்பவர் சொகுசு விடுதி நடத்தி வருவதாகவும். அங்கு வித்தியாசமான உல்லாசத்தை அனுபவிக்கலாம் என்றும் கூறினாராம். சூளைமேடு சொகுசு விடுதியில் இன்ப விருந்து காத்திருக்கிறது என்றும் சார்லசுக்கு அழைத்தாராம். இதனை நம்பி சபலப்பட்டு சார்லஸ், சூளைமேட்டில் உள்ள சொகுசு விடுதிக்கு சென்றாராம்.

அங்கே ரேகா சாவித்திரி என்ற பெண்ணும் 2 இளைஞர்களும் இருந்தனர். விடுதிக்குள் சென்ற உடனேயே அங்கிருந்த ஆண்கள் இருவரும் தங்களை காவலர்கள் என்று அறிமுகம் செய்துகொண்டு, சார்லசை கடுமையாக தாக்கினார்களாம். இதில் சார்லஸ் அதிர்ச்சி அடைந்த நிலையில், அவர் அணிந்திருந்த 20 பவுன் தங்கச்சங்கிலி, கைச்சங்கிலி ஆகியவற்றையும் விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை பறித்துவிட்டார்களாம். 'கூகுள் பே' மூலம் சார்லசின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத்தையும் பறித்தார்களாம். பின்னர் சார்லசை அங்கிருந்து விரட்டி அடித்தனர். வெளியில் சொன்னால் அசிங்கம் என்று நினைத்து விட்டுவிடுவார் என நினைத்த கொள்ளையர்களுக்கு அதன்பின்னர் தான் சிக்கல் வந்தது.

இதுகுறித்து சார்லஸ் தைரியமாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். குறிப்பிட்ட சொகுசு விடுதிக்கும் சென்று போலீசார் விசாரித்தனர். ஆனால் அந்த சொகுசு விடுதியில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது மசாஜ் அழகி ஆண்ட்ரியாவும் அவரது காதல் கணவர் கோகுல கிருஷ்ணனும்தான் சார்லஸ் தாக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதை விசாரணையில் போலீசார் கண்டுபிடித்தனர். இதனிடையே போலீஸ் தேடுவதை அறிந்த அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

மசாஜ் செய்து பணம் பறிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ரேகா சாவித்திரி என்ற பெண்ணும் போலீஸ்காரராக நடித்த நவீன்குமார் (23) என்ற இளைஞர் மட்டும் அப்போது கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவான ஆண்ட்ரியாவையும், அவரது காதல் கணவர் கோகுல கிருஷ்ணனையும் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இதற்கிடையே நேற்றுமுன்தினம் அவர்கள் இருவரும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+