சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ரூ 1000.. வீட்டுக்கே வந்து விநியோகம் செய்யும் அதிகாரிகள்
சென்னை: முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை, காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 1000 நிவாரணம் வழங்கப்படுகிறது. அந்த உதவி அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தினமும் கொரோனாவால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள்.

கொரோனா பரவலை தடுக்க கடந்த 19-ஆம் தேதி முதல் இந்த மாதம் முடிய 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ 1000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதனை செயல்படுத்தும் விதமாக இன்று முதல் 26-ஆம் தேதி வரை 5 நாட்கள் ரேஷன் கடைகள் செயல்படாது என்றும் ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை பெறாதவர்கள் 27-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications