சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ரூ 1000.. வீட்டுக்கே வந்து விநியோகம் செய்யும் அதிகாரிகள்
சென்னை: முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை, காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 1000 நிவாரணம் வழங்கப்படுகிறது. அந்த உதவி அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தினமும் கொரோனாவால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள்.
கொரோனா பரவலை தடுக்க கடந்த 19-ஆம் தேதி முதல் இந்த மாதம் முடிய 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் 24 மணிநேரத்தில் 14,821 பேருக்கு கொரோனா; 445 பேர் மரணம்; 2-வது இடத்தில் டெல்லி
Recommended Video
இந்த பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ 1000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதனை செயல்படுத்தும் விதமாக இன்று முதல் 26-ஆம் தேதி வரை 5 நாட்கள் ரேஷன் கடைகள் செயல்படாது என்றும் ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை பெறாதவர்கள் 27-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.