சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ரூ 1000.. வீட்டுக்கே வந்து விநியோகம் செய்யும் அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை, காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 1000 நிவாரணம் வழங்கப்படுகிறது. அந்த உதவி அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று விநியோகம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தினமும் கொரோனாவால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள்.

Chennai and 3 more districts ration card holders will get Rs 1000 as lockdown relief

கொரோனா பரவலை தடுக்க கடந்த 19-ஆம் தேதி முதல் இந்த மாதம் முடிய 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ 1000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதனை செயல்படுத்தும் விதமாக இன்று முதல் 26-ஆம் தேதி வரை 5 நாட்கள் ரேஷன் கடைகள் செயல்படாது என்றும் ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை பெறாதவர்கள் 27-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    இதுவா அரசியல் செய்யும் நேரம்.. மாஸ்க் போடுங்க எல்லாரும்.. விஜயபாஸ்கர் உருக்கம்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+