Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் நடிகை மீனாட்சி கோவிந்தராஜனை செருப்பால் அடித்த நபர்.. 5 வருடம் கழித்து பழி வாங்கிய ஜேம்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை வளசரவாக்கம் அடுத்த ஆலப்பாக்த்தில் துணை நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் , மற்றும் அவரது தாயாரையும் செருப்பால் அடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தகராறை தொடர்ந்து, தற்போது பழிவாங்கும் நோக்கில் செருப்பால் அடித்ததாக கைதான நபர் போலீசாரிடம் வாக்குமூலம் தந்துள்ளார். யார் அவர், என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

சென்னை , ஆலப்பாக்கம், சாலிகிராமம், மதுரவாயல், விருகம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம் ஆகியவை அடுத்தடுத்து உள்ளன. குறித்து விரும்பாக்கம் தொடங்கி, சாலிகிராமம்,வளசரவாக்கம், ஆலப்பாக்கம் பகுதியில் ஏராளமான திரைப்பட நடிகர்கள், நடிகைககள் குடியிருக்கிறார்கள். பெரும்பாலான சீரியல் நடிகர், நடிகைகள் இங்கு தான் வசிக்கிறார்கள். இந்த பகுதியில் ஏராளமான துணை நடிகைகளும், துணை நடிகர்களும் வசித்து வருகிறார்கள்,

Actress

இந்நிலையில் மதுரவாயல் அடுத்து உள்ள ஆலப்பாக்கத்தில் துணை நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் என்பவர் தனது 50 வயது தாயாருடன் வசித்து வருகிறார். துணை நடிகை மீனாட்சி பல்வேறு திரப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கென்னடி கிளப், வேலன், கோப்ரா, வீரபாண்டியபுரம், டிமாண்டி காலனி 2, உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இவரது வீட்டின் கதவை நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் தட்டியதாக கூறப்படுகிறது. கதவை மீனாட்சியின் தாயார் திறந்துள்ளார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் துணை நடிகை மீனாட்சி கோவிந்தராஜனை தாயாரை தனது செருப்பால் அந்த மர்ம நபர் தாக்கினாராம். சத்தம் கேட்டு வந்த நடிகை மீனாட்சியையும் அந்த நபர் செருப்பால் ஆவேசமாக தாக்கினாராம். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனே அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்ததனர்.

இதனிடையே மீனாட்சி தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் பிடிப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர். அவரை விசாரித்த போது, அவர் பெயர் ஜேம்ஸ் (42) என்பதும் , ஆலப்பாக்கத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் என்பதும் தெரியவந்தது.

அவரிடம் எதற்காக நடிகை துணை நடிகை மீனாட்சி கோவிந்தராஜனை செருப்பால் அடித்தாய் என்று போலீசார் விசாரித்துள்ளனர். அதற்கு, அந்த நபர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தன்னை துணை நடிகை மீனாட்சி கோவிந்தராஜனி தாயார் செருப்பால் அடித்ததால், அவரை பழிவாங்கும் நோக்கில் செருப்பால் தாக்கியதாக ஜேம்ஸ் கூறியுள்ளார். கைதான ஜேம்ஸ் மீது அத்துமீறி நுழைதல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+