சென்னையில் மாலை 5 மணி நிலவரம்! வாக்கு சதவீதத்தில் ஆர்.கே.நகர் டாப்! மயிலாப்பூருக்கு என்னாச்சு?
சென்னை: சென்னையில் மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 81.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் எந்த தொகுதியில் அதிக வாக்குகள், எங்கு குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதையும் பார்க்கலாம்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. சென்னை மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 81.34 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னை மண்டலத்தில் மொத்தம் 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் விருகம்பாக்கத்தில 83.84 சதவீதம், திநகரில் 81.82 சதவீதம், வேளச்சேரியில் 82.16 சதவீதம், கொளத்தூரில் 83.58 சதவீதம், அண்ணா நகரில் 83.44 சதவீதம், வில்லிவாக்கத்தில் 83.56 சதவீதம், பெரம்பூரில் 86.74 சதவீதம், ஆயிரம்விளக்கில் 81 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
அது போல் ஆர்.கே.நகரில் 87.12 சதவீதமும் சைதாப்பேட்டையில் 75.92 சதவீதமும் எழும்பூரில் 82.71 சதவீதமும் சேப்பாக்கத்தில் 81.89 சதவீதமும், துறைமுகம் தொகுதியில் 80.61%, மயிலாப்பூரில் 72.79 சதவீதமும், ராயபுரத்தில் 76.73 சதவீதமும் திருவிக நகரில் 76.09 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.
ஆர்.கே.நகரில்தான் அதிகபட்சமாக 87.12 சதவீதம் வாக்குகளும் மயிலாப்பூரில் குறைந்தபட்சமாக 72.79 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இது 5 மணி நிலவரம்தான்! போக போக எந்த தொகுதியில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்பதை பார்க்கலாம்.
வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் பேருந்து நிலையங்களில் காத்திருக்கிறார்கள். ஆனால் போதிய அளவில் பேருந்துகள் இல்லாததால் வாக்களிக்க செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். இதனால் எஸ்ஐஆருக்கு பின்பும் வாக்குப் பதிவு அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications