Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதலியை பெட்ரோலுடன் ஓடிப்போய் கட்டிப்பிடித்து கொண்ட ஆட்டோ டிரைவர்.. ஒரு நொடியில் ஆடிப்போன சென்னை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கள்ளக்காதல் விவகாரங்கள் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், அது தொடர்பான குற்றங்களும் பெருகி வருகின்றன.. சென்னை மட்டுமில்லை, உறவு சிக்கல்களால், குடும்பங்கள் பிரிந்து, குழந்தைகளும் நடுத்தெருவுக்கு வந்துவிடும் சூழல் இன்று நாடு முழுவதுமே ஏற்பட்டுள்ளது. இதோ இப்போது மீண்டும் சென்னையில் ஒரு கொடுமை நடந்துள்ளது. மனம் திரும்பி வாழ நினைத்தபோதும் இப்படி ஒரு துயரம் ஏற்பட்டிருக்கிறது.

சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் அபிபுல்லா.. இவருக்கு 50 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் நூரிஷா . இவருக்கு 42 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

Chennai Petrol Auto driver

இவர்கள் ஏற்கனவே திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் வசித்து வந்தனர்.. அப்போது நூரிஷாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் டெல்லிபாபு என்பவருக்கும் விரும்பத்தகாத உறவு நீடித்து வந்தது..

தகாத உறவு

இந்த விஷயம் அபிபுல்லாவுக்கு தெரியவந்ததுமே, அந்த வீட்டை காலி செய்துவிட்டு கடந்த 3 மாதத்துக்கு முன்புதான் எர்ணாவூர் பகுதியில் சுனாமி குடியிருப்பில் குடியேறினார். இதனால் ஆட்டோ டிரைவர் டில்லிபாபுவுக்கு, நூரிஷாவுடன் பேச முடியாமல் போனது. இதற்காக பலமுறை முயற்சி செய்தும் தோல்வியே கிடைத்தது.

பெட்ரோல்

இந்நிலையில், கடந்த 9ம் தேதி டில்லிபாபு, நூரிஷாவின் வீட்டுக்கு வந்து, "ஏன் என்னிடம் பேசுவதை தவிர்க்கிறாய்" என்று கேட்டுள்ளார்... அதற்கு நூரிஷா, இத்தனை நாள் நான் தவறு செய்துவிட்டேன்.. இப்போது மனம் திருந்திவிட்டேன்.. உன்னிடம் பேச விருப்பம் இல்லை, இனிமேல் என்னுடைய வாழ்க்கையில் குறுக்கிடாதே" என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த டில்லிபாபு, நூரிஷாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்..

இறுதியில் உச்சக்கட்ட கோபம் கொண்ட டெல்லி பாபு, தான் கையோடு பாட்டிலில் கொண்டு வைத்திருந்த பெட்ரோலை தன்னுடைய உடம்பில் ஊற்றி லைட்டர் மூலம் தீ வைத்துக் கொண்டார். இது பார்த்து அதிர்ச்சியடைந்த நூரிஷா கூச்சல் போடவும், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.. ஆனால் அதற்குள் உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் திடீரென்று நூரிஷாவை கட்டிப்பிடித்து கொண்டார் ஆட்டோ டிரைவர்.

சென்னையில் பரிதாபம்

இதில் தூரிஷா மீதும் தீப்பற்றி கொண்டு, உடல் முழுவதும் எரிந்தது.. இருவருமே உடல் கருகி போராடியபோது அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்துள்ளனர். இவர்களை காப்பாற்ற முயன்ற நூரிஷாவின் அம்மா ஜெனிமா (80) என்பவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் எண்ணுார் போலீசார் வந்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், நூரிஷா பரிதாபமாக இறந்தார். டெல்லிபாபு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+