ஐயோ! நான்-ஸ்டாப் ஃப்ளைட்டை விட குறைந்த நேரத்தில்! சென்னையிலிருந்து பெங்களூருக்கு ரயிலில் பறக்கலாம்!
சென்னை: சென்னையிலிருந்து பெங்களூருக்கு வெறும் 30 நிமிடங்களில் பயணிக்கலாம். அதுவும் பிளைட் செல்லும் நேரத்தை விட குறைந்த நேரத்தில்!
ஒவ்வொரு ஊருக்கு செல்லும் போது அது தூர தேசத்தை போல் இருக்கும். அது பஸ்ஸாக இருந்தாலும் ரயிலாக இருந்தாலும் பிளைட்டாக இருந்தாலும் சரி! இதனால் மேற்கண்ட எந்த போக்குவரத்தில் சொகுசாக சென்றாலும் எப்போது செல்லுமிடத்தை அடைவோம் என்பதில்தான் நம் எண்ணம் இருக்கும்.

இதற்காகவே இடைநில்லா பேருந்து நான் ஸ்டாப் பிளைட், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்கள் இயக்கப்படுகின்றன. புல்லட் ரயில்கள் 300 கி.மீ. வேகத்தில் செல்லும். இதனால் பயண தூரம் வெகுவாக குறையும். அந்த வகையில் தற்போது வந்தே பாரத், எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் புல்லட் ரயிலை காட்டிலும் 4 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைபர்லூப் தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு நாட்டின் கனவு திட்டமாகும். அந்த வகையில் இது எலான் மஸ்க்கின் கனவு திட்டமும் கூட! இந்த தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஹைப்பர்லூப் போக்குவரத்து என்பது காற்று புகாத ஒரு வெற்றிட குழாய்களை உருவாக்கி அதில் மின்காந்த அலைகளின் உதவியுடன் கேப்சூல் போன்ற பெட்டிகளை மின்னல் வேகத்தில் பயணிக்கச் செய்வது ஆகும். இந்த தொழில்நுட்பத்திற்கு காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மற்றும் பெங்களூர் இடையே 350 கி.மீ. தொலைவுக்கு ஹைபர்லூப் வழித்தடத்தை உருவாக்க இந்த ஐஐடி குழு செயல்பட்டு வருகிறது.
இதனால் இரு நகரங்களையும் வெறும் 30 நிமிடங்களில் அடையலாம். இருபது ஆண்டுகளுக்குள் இந்தியாவின் முதல் ஹைபர்லூப் வழித்தடத்தை உருவாக்க கால திட்டம் வகுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட குழுவினர்தான் ஆவிஷ்கார் ஹைபர்லூப் குழுவினர். 2019 ஆம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் போட்டியில் 1600 குழுக்களில் ஒன்றாக இவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் ஆவிஷ்கார் அணி வந்ததுடன் இறுதிச் சுற்றுக்கு வந்த முதல் ஆசிய அணியாகவும் திகழ்ந்துள்ளது. 400 மீட்டர் தூர ஹைபர்லூப் அமைக்கும் பணிகள் இந்திய ரயில்வே துறையின் நிதியுதவியுடன் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில் கிரவுண்டில் இயங்குவதற்கு பதில் ரயில்கள் டியூப்பில் இயங்கும். இதற்கு காரணம் காற்று புகாத வெற்றிடத்தில் பயணிக்கும் போது மின்னல் வேகம் இருக்கும். இதனால் ஆற்றலும் குறையும்.
சென்னையில் இருந்து கொண்டோ பெங்களூரில் இருந்து கொண்டோ வேலை செய்யலாம். வேறு இடத்தில் வேலை கிடைத்துவிட்டால் அந்த இடத்திற்கு குடி பெயர வேண்டும் என்ற அவசியமே இல்லை. இது ரயில் போல்தான், விமான நிலையம் போல் இருக்காது. அனைத்து இடங்களிலும் இந்த ரயிலை ஆக்சஸ் செய்யும் வகையில் இருக்கும். இவ்வாறு ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொதுவாக நான்ஸ்டாப் விமானத்தில் சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல குறைந்தது 55 நிமிடங்கள் ஆகும். ஆனால் இந்த ஹைபர்லூப் டெக்னிக் மூலம் ரயிலில் செல்லும் போது வெறும் 30 நிமிடங்களே ஆகும்.
-
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா!












Click it and Unblock the Notifications