சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே மின்சார ரயில் நாளை ரத்து.. மொத்தம் 53 ரயில்கள் இயங்காதாம்!
சென்னை: சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் ரயிலில் தினமும் லட்சக்கணக்கானோர் பணி நிமித்தமாகவும் படிப்பதற்காகவும் சொந்த அலுவல்களுக்காகவும் பயணித்து வருகிறார்கள். இது ஒரு விதத்தில் போக்குவரத்தை நெரிசலை குறைக்கிறது.

எரிவாயுவையும் அதற்கான பணத்தையும் சேமிக்கிக்கிறது. எனவே சென்னையின் பிரதான பொது போக்குவரத்து சேவையாகவே புறநகர் ரயில் சேவையும் மெட்ரோ ரயில் சேவையும் மாறிவிட்டது. உடல் அலுப்பே இல்லாமல் செய்கிறது இந்த ரயில் பயணம்.
இந்த நிலையில் சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை கடற்கரை- தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்கள் காலை 10.20 முதல் 2.45 மணி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
அது போல் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள் காலை 9.08 மணி முதல் பகல் 3.20 வரை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 2.20 மணி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அது போல் காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் ரயில், திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்படும் ரயில்களும் செங்கல்பட்டில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் ரயில்களும் என முற்றிலுமாக நாளை ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரம்- செங்கல்பட்டு இடையே பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. தாம்பரம்- செங்கல்பட்டு இடையே காலை 11.51 மணிக்கு, பகல் 12.35 மணிக்கு, பிற்பகல் 1.15 மணிக்கு , 1.35 மணிக்கு, 1.55 மணிக்கு , 2.45 மணிக்கு, மாலை 3.10, 3.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவுள்ளன. அது போல் செங்கல்பட்டு- தாம்பரம் இடையே காலை 9.30 மணி முதல் பகல் 12 மணி, 1 மணி, 1.15 மணி, பிற்பகல் 2.20 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications