Chennai Budget 2025: சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் மேயர் பிரியா!
சென்னை: சென்னை மாநகராட்சியின் 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்து, அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம்பெறும் எனவும் கடந்த நிதி ஆண்டை போலவே இந்த நிதி ஆண்டிலும் கல்வி உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்
சென்னை மாநகராட்சியின் 2024-25 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர், மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி உள்ளது. இதில் மாநகராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து மேயர் பிரியா அறிவிக்கிறார்.
சென்னை பள்ளிகளில் போட்டி தேர்வுகள் நடத்தி பரிசுகள் வழங்க, சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.86.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு பரிசுகளும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்க ரூ.86.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு திட்டங்கள்
சென்னை பள்ளிகளில் 10ஆம் வகுப்பு, 11மற்றும் 12ஆம் வகுப்பில் படிக்கும் ஆர்வமுள்ள மாணவ மாணவியர்களை தேர்ந்தெடுத்து ஆலோசனைகள் வழங்கவும். போட்டித் தேர்விற்கு விண்ணப்பிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவ மாணவியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 15,000 முதல் ரூபாய் 150,000-வரை வழங்கவும் ரூபாய் 40.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் பள்ளிகளைக் கண்டறிந்து, அப்பள்ளிகளில் விருப்பத்துடன் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைக் கொண்டு மண்டலம் வாரியாக வளமிகு ஆசிரியர் குழு (Pooling of Resource Teachers) அமைக்கப்படும். அக்குழுவின் ஆசிரியர்களைக் கொண்டு. அம்மண்டலத்திற்குட்பட்ட பள்ளிமாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக 75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள், வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் அழகுப்படுத்தும் பணிகள், போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications