குரோம்பேட்டை வைஷ்ணவ கல்லூரி ரயில்வே கேட்டில் சுரங்கப்பாலம் கைவிடப்பட்டது.. ஷாக் தந்த அரசு
சென்னை: சென்னை கிழக்கு குரோம்பேட்டை பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் ரேடியல் சாலையை பிடித்து தான் மேம்பாலம் ஏறி ரயில் பாலத்தையும் ஜிஎஸ்டி சாலையையும் கடக்க முடியும். அதைவிட்டால் எம்.ஐ.டி. மேம்பாலம் போக வேண்டும். வேறு வழியே கிடையாது. இந்நிலையில் ராதா நகரில் 19 வருடங்களாக சுங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் குரோம்பேட்டை வைஷ்ணவ கல்லூரி ரயில்வே கேட் பகுதியில் நிலம் இல்லாததால் சுரங்கப்பாலம் அமைக்கும் பணி கைவிடப்பட்டிருப்பது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.
25 வருடங்களுக்குமுன்பு சென்னையின் புறநகர் என்று சொல்லப்பட்ட குரோம்பேட்டை இன்று சென்னையின் மையப்பகுதி என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. குரோம்பேட்டையை தாண்டாமல் விமான நிலையமோ, ஓஎம்ஆர் சாலைக்கோ, ஈசிஆர் சாலைக்கோ, கிண்டிக்கோ யாருமே போக முடியாது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த இடம். ரயில் நிலையமும், பேருந்து நிலையமும் ஒரே இடத்தில் அமைந்திருக்கிறது. ஓஎம்ஆர், ஈசிஆர், குன்றத்தூர் போரூர், தாம்பரம், சிட்லப்பாக்கம் என எல்லாமே இணையும் இடமாக குரோம்பேட்டை இருப்பதால் தாம்பரத்தைவிடவும் அசுர வளர்ச்சி அடைந்தது.'

குரோம்பேட்டை
மக்கள் தொகையும் மிகமிக அதிகமாக இருக்கிறது. சென்னை மாநகரில் உள்ள நிலத்தின் மதிப்பை விட குரோம்பேட்டையில் நிலத்தின் மதிப்பு அதிகமாக இருக்கிறது. வணிக நிறுவனங்கள் எல்லாமே குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உள்ளன. சின்ன தியாகராய நகர் போல் குரோம்பேட்டை மாறிவிட்டது. தாம்பரத்தின் வணிக மையமாக குரோம்பேட்டை தான் இன்றைக்கு இருக்கிறது.குரோம்பேட்டை என்பதை ரயில் நிலையத்தை அடிப்படையாக வைத்து கிழக்கு குரோம்பேட்டை, மேற்கு குரோம்பேட்டை என இரண்டாக உள்ளது.
கிழக்கு குரோம்பேட்டை பகுதியில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வசிக்கிறார்கள். ஜி.எஸ்.டி. சாலை மற்றும் அவசர தேவைகளுக்கு மேற்கு குரோம்பேட்டை பகுதிகளுக்கு வரும்போது வைஷ்ணவ கல்லூரி ரயில்வே கேட் மூடப்படும்.. இதனால் அவர்கள் நீண்ட தூரம் சுற்றி எம்.ஐ.டி. மேம்பாலம் அல்லது ரேடியல் சாலை மேம்பாலம் வழியாக வரவேண்டிய நிலை இன்று வரை உள்ளது.
ராதாநகர் சுரங்கப்பாதை
இதனால் இந்த ரயில்வே கேட்டை மூடிவிட்டு அந்த பகுதியில் சுரங்கப்பாலம் அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, சுரங்கப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேநேரம் பக்கத்தில் உள்ள ராதா நகர் சுரங்கப்பாதை பணிகளும் 19 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. தற்போது தான் ஓரளவு பணிகள் முடிந்திருக்கிறது. அனேகமாக இன்னும் சில மாதங்களில் திறக்கப்படும் என தெரிகிறது. இதனிடையே வைஷ்ணவ கல்லூரி ரயில்வே கேட் பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தார்கள்.
வைஷ்ணவ கல்லூரி சுரங்கப்பாதை
இந்நிலையில் குரோம்பேட்டையை சேர்ந்த சந்தானம் என்பவர் நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வைஷ்ணவ கல்லூரி ரயில்வே கேட் சுரங்கபாதை குறித்து கேள்வி கேட்டிருந்தார். அதற்கு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அளித்த பதிலில், "வைஷ்ணவ கல்லூரி ரெயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாலம் அமைக்க போதிய நிலம் இல்லை என்பதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இது தொடர்பாக அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து ரயில்வே துறையுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்" என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.
மக்கள் கவலை
வைஷ்ணவ கல்லூரி பகுதியில் சுரங்கப்பாலம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்ட தகவல் ஊடகங்களில் வெளியான நிலையில், பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். ராதா நகர் சுரங்கப்பாதை 19 ஆண்டுகளை கடந்து நடந்து வரும் நிலையில், இந்த மேம்பாலம் அமைக்கப்படாது என்ற தகவல் குரோம்பேட்டை மக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
-
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
மன்சூர் அலிகான் வாயில் இருந்து என்ன எடுத்தார்? - வீடியோ தீயாகப் பரவிய நிலையில் அவரே கொடுத்த விளக்கம் -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
சென்னையில் கண்டக்டர் இல்லாத தங்கரதம் அரசு பஸ்.. ஓஎம்ஆர் ரூட்டின் வரப்பிரசாதம்.. டிக்கெட் விலை ஹேப்பி -
Chennai Encounter: சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸாரால் சுட்டுக் கொலை -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே!












Click it and Unblock the Notifications