Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை - கோவை விமான கட்டணம் ரூ.60,000.. திருச்சிக்கு ரூ.41,000.. இண்டிகோவால் விலை உயர்ந்த டிக்கெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பைலட்டுகள் பற்றாக்குறையால் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் சென்னையில் இருந்து வெளியூருக்கான விமான கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கான விமான கட்டணம் ரூ.60 ஆயிரமாகவும், சென்னை - திருச்சி விமான கட்டணம் ரூ.41 ஆயிரமாகவும் உள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர், டெல்லிக்கு செல்வதை விட கோவை, திருச்சிக்கான விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பைலட்டுகள் பற்றாக்குறைவால் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி முதல் தொடர்ந்து விமான சேவைகள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.

indigo flight

இண்டிகோ நிறுவனம் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையில் முக்கிய பங்காற்றி வருகிறது. இதனால் தற்போது டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய விமான நிலையங்களில் இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த நிறுவனத்தில் நிலவும் பைலட்டுகள் பற்றாக்குறை தான் காரணம்.

இதனால் தற்போது பிற விமான நிறுவனங்கள் தங்களின் டிக்கெட் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளன. அதன்படி சென்னை - கோவை விமான கட்டணம் ரூ.60 ஆயிரமாக உயர்ந்துள்ளது. வழக்கமாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4,500 வரை விமான கட்டணம் இருக்கும். பண்டிகை காலங்களில் இந்த கட்டணம் இன்னும் கூடுதலாக உயரும். ஆனால் முதல் முறையாக ரூ.60 ஆயிரமாக விமான கட்டணம் அதிகரித்துள்ளது.

சென்னை - திருச்சி விமான கட்டணம் ரூ.41 ஆயிரமாக அதிகரித்துள்ளது. சென்னை - பெங்களூர் விமான கட்டணம் ரூ.17 ஆயிரமாக இருக்கிறது. சென்னை - டெல்லி விமான கட்டணம் ரூ.36,000 ஆக உள்ளது. சென்னையில் இருந்து டெல்லி, சென்னையில் இருந்து பெங்களூருவுக்கான டிக்கெட் கட்டணத்தை விட சென்னை - கோவை, சென்னை - திருச்சி இடையேயான விமான கட்டணம் அதிகமாக உள்ளது. இந்த விமான கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நம் நாட்டில் முக்கியமான விமான நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ. இந்த நிறுவனம் என்பது உள்நாட்டு சேவையில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது இண்டிகோ விமான சேவைகள் கடந்த 1ம் தேதி முதல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் பணி கட்டுப்பாட்டு விதிமுறைகளை செயல்படுத்தியது தான் இதற்கு காரணம். அதாவது விமானிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கு தங்களின் பணி நேரத்தை விட கூடுதலாக பணி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதனால் அதிகப்படியான விமானிகள், ஊழியர்கள் தேவையாக உள்ளது.

இதனை இண்டிகோ நிறுவனத்தால் சமாளிக்க முடியவில்லை. இதனால் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்படுவதும், தாமதமாக புறப்பட்டு செல்வதும் தொடர்ந்து வருகிறது. இன்றைய தினம் 500 இண்டிகோ விமானங்களின் சேவைகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 400 விமானங்கள் ரத்தாகி உள்ள நிலையில் 100க்கும் அதிகமான விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. இதனால் பிற விமான நிறுவனங்கள் தங்களின் கட்டணத்தை உயர்த்தி உள்ளன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+