சென்னை மாநகராட்சி பட்ஜெட்: இறையன்பு சகோதரர் திருப்புகழின் திட்டங்கள் என்ன? பெரும் எதிர்பார்ப்பு
சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிற நிலையில் மழை நீரால் சென்னை தத்தளிப்பதை தடுக்கும் விதமாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழின் தலைமையில் குழுவினரின் திட்டங்கள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video
சிங்கார சென்னை, டெட்ராய்டு ஆப் இந்தியா, வந்தாரை வாழ வைக்கும் ஆகிய பெருமைகளை கொண்ட தமிழக தலைநகர் சென்னை. இத்தனை பெருமைகள் இருந்தாலும் வடகிழக்கு பருவமழை காலம் வந்தால் போதும் சென்னை மழைநீரில் தத்தளிக்கும்.
மழை வடிகால் திட்டம் சரிவர இல்லாததால் சாலைகளில் மார்பளவுக்கு கூட தண்ணீர் தேங்கி மக்களுக்கு பாதிப்பைக்குண்டாக்கும். மழைக்காலம் முடிந்ததும் கோடைக்காலம் தொடங்கிவிடும்.

மழைக்காலம்
மழைக்காலத்தில் சரிவர தண்ணீரை தேக்கி வைக்காவிட்டால் இதனால் நீர் நிலைகள் வறண்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். எனவே மழை பெய்தாலும் சரி மழை பெய்யாவிட்டாலும் சரி சென்னைக்கு பாதிப்பு என்பது அதிகளவில் இருக்கும். வேளச்சேரி, மடிப்பாக்கம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகள், வடசென்னை, புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பி இரு தளங்கள் வரை தண்ணீர் சூழ வாய்ப்புள்ளது.

மழை நீர் தேங்குதல்
ஒவ்வொரு மழை காலத்திலும் மழை நீர் தேங்குவதும், மக்கள் முக்கிய பொருட்களுடன் மொட்டை மாடியில் தஞ்சமடைவதும் அதிகாரிகள் பார்வையிடுவது என இருக்கிறது. ஆனால் மழை நீர் தேங்காத வண்ணம் இருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் முதலில் மழை நீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளை செய்தது.

சென்னையில் அதிகபட்ச மழை
கடந்த நவம்பரில் சென்னையில் அதிகபட்ச மழை பெய்ததால் தலைநகரமே நீரில் தள்ளாடியது. இந்த மழை பாதிப்பை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் அடுத்த பருவமழையின் போது மழைநீர் தேங்காத வண்ணம் மழைநீர் வடிகால்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.

பேரிடர் மேலாண்மை துறை
அதற்கேற்ப பேரிடர் மேலாண்மை துறையில் அனுபவம் வாய்ந்த திருப்புகழ் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மழைநீர் தேங்கும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர ஒரு குழுவை அமைத்தார். இவர் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவின் மூத்த சகோதரர் ஆவார். குஜராத் நிலநடுக்கம், மழை வெள்ளக் காலங்களில் திருப்புகழின் பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது.

20 இடங்களில் தண்ணீர்
அந்த வகையில் அந்த குழுவினரின் அறிக்கையின் படி சென்னையில் அதிக அளவு நீர் தேங்கும் 20 இடங்களில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவதால் திருப்புகழின் திட்டங்கள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மழைநீர் வடிகால் துறைக்கு ரூ 2000 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications