வாட்ஸ் அப் செயலி மூலம் பெறப்படும் புகார்களை நீக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை
சென்னை: மழைக்கால நிவாரண நடவடிக்கைக்காக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் நம்பரில் பெறப்படும் புகார்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பும் பணியை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறுகையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி அன்று பெய்த கனமழையின் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேக்கம் இருந்து வந்தது.

மாநகராட்சியின் சார்பில் மழைநீரை வெளியேற்ற பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் பருவமழை குறித்து கண்காணிக்கவும் பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறவும், 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
இந்தக் கட்டுப்பாட்டு அறையில் 044-25619204, 044-25619206, 044-25619207, 044-25619208, 044-25303870 என்ற 5 தொலைபேசி எண்களும் 9445477205 என்ற வாட்ஸ் ஆப் எண்ணும் செயல்பட்டு வருகிறது. மேலும் 5 இணைப்புகளுடன் செயல்பட்டு வந்த 1913 என்கிற உதவி எண் தற்போது மழை, வெள்ளத்தின் காரணமாக 30 இணைப்புகளாக மேம்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மேலும் 9445025819, 9445025820 மற்றும் 9445025821 என்ற 3 வாட்ஸ் ஆப் எண்கள் கூடுதலாக இன்று முதல் செயல்பட்டு வருகிறது. இந்த வாட்ஸ் ஆப் எண்களிலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மழைநீர் தேக்கம், மரக்கிளைகள் அகற்றுதல் மற்றும் இதரப் புகார்கள் குறித்து தகவல்களை தெரிவிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications