சொத்து வரி கட்டாத 2 லட்சம் பேர்.. கியூஆர் கோடுடன் வரப்போகும் நோட்டீஸ்.. சென்னை மாநகராட்சி முடிவு!
சென்னை: சென்னையில் முறையாக சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு கியூஆர் குறியீட்டுடன் கூடிய நோட்டீஸை அளிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இதன்படி சுமார் 2 லட்சம் பேருக்கு அனுப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், கியூஆர் குறியீட்டை பயன்படுத்தி எளிதாக சொத்து வரியை செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சொந்தமாக வீடு, நிலம் வைத்திருப்பவர்கள் ஆகியோரிடம் இருந்து மாநகராட்சி சார்பாக சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வரி வருவாய் மூலமாக தான் மாநகராட்சி சார்பாக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சுகாதார பணிகள், தெரு விளக்குகள், பூங்காக்களை பராமரித்தல், திடக்கழிவு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் மூலமாக ஆண்டுக்கு ரூ.1,700 கோடி வரை சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன்படி சென்னையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் முதல் அரையாண்டுக்கான வரியையும், பின்னர் அக்டோபர் 30ஆம் தேதிக்கும் அடுத்த அரையாண்டுக்கான வரியையும் செலுத்த வேண்டும். சரியான நேரத்தில் சொத்து வரியை கட்டினால், ரூ.5 ஆயிரம் வரை வரியில் தள்ளுபடி அளிக்கப்படும்.
தற்போது நடப்பு நிதியாண்டுக்கான சொத்து வரி வசூல் பணிகள் சென்னை மாநகராட்சி சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் சொத்து வரி கட்டாமல் இருப்பவர்களால் சென்னை மாநகராட்சி பல்வேறு பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் திண்டாடி வருகிறது. இதற்காக கடந்த மாதம் முதலே வார்டு வாரியாக ஆய்வு நடத்தி கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு வருகிறது.
சில பகுதிகளில் சீல் வைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் முறையாக சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இதன்படி முறையாக சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு கியூஆர் குறியீட்டுடன் கூடிய நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.5 ஆயிரத்திற்கு மேல் சொத்து வரி நிலுவை வைத்திருப்பவர்களுக்கு இந்த வகையில் நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது. அவர்கள் இந்த கியூஆர் குறியீட்டை பயன்படுத்தி எளிதாக சொத்து வரியை செலுத்த முடியும். மேலும் நீண்ட காலமாக வரி செலுத்தாமல் இருக்கும் சுமார் 2 லட்சம் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாமல் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications