சென்னை தி நகர் பாண்டி பஜாரில் ஏசி அறை.. ஸ்விக்கி, ஜொமாட்டோ ஊழியர்களுக்கு அற்புதமான வசதிகள்..பாருங்க
சென்னை: சென்னையில் Swiggy, Zomato போன்ற ஆன்லைன் டெலிவரி சேவை செய்யும் நிறுவன ஊழியர்களுக்காக சென்னை திநகர் பாண்டி பஜாரில் ஏசி ஓய்வறை அற்புதமான வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள அந்த ஏசி ஓய்வறைகள் பார்க்கவே அற்புதமாக இருந்தது. அதன் வசதிகள் மற்றும் சிறப்புகள் பற்றி இந்த வீடியோவில் நாம் பார்ப்போம்.
சென்னை போன்ற பெரிய நகரங்களில் Swiggy, Zomato போன்ற உணவு டெலிவரி சேவை செய்யும் நிறுவனங்கள் 24 மணி நேர உணவு டெலிவரி சேவையை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில், உணவு டெலிவரி செய்யும் வேலையில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த ஊழியர்கள் மழை, வெயில் போன்ற கடினமான சூழல்களில் கூட டெலிவரி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த டெலிவரி ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பெண்களாக இருக்கும் நிலையில், இந்த ஊழியர்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கிடைப்பது இல்லை என்ற ஆதங்கம் நீண்ட காலமாகவே உள்ளது.
இந்நிலையில், இந்த ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னையின் முக்கிய சாலைகளில், ஏசி ஓய்வறையை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி சென்னையில் இரண்டு இடங்களில் ஏசி ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. 600 சதுரஅடி பரப்பளவில் ஓய்வறையில், 20 அடி நீளம் 10 அடி அகலத்தில் கழிவறை, குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் இருக்கிறது. 25 பேர் வரை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். அதோடு 20 இரு சக்கர வாகனங்கள் வரை பார்க்கிங் செய்யும் முடிகிறது. அதற்கும் வசதிகளை அரசு ஏற்படுத்தி உள்ளது.
முதற்கட்டமாக Swiggy, Zomato , ஜெப்டோ, பிக் பாஸ்கெட் போன்ற டெலிவரி தொழிலாளர்களுக்கான ஓய்வுக்கூடம் சோதனை அடிப்படையில், சென்னை அண்ணா நகரில் திறக்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்தே, இரண்டாம் கட்டமாக சென்னை தியாகராய நகரில் உள்ள பாண்டி பஜாரில் ஆன்லைன் டெலிவரி தொழிலாளர்களுக்கான ஓய்வுக்கூடம் ஜூலை 18ம் தேதி அன்று திறக்கப்பட்டது
அங்கு சென்று நாம் பார்த்த போது, நல்ல அழகான கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டு இருந்ததை காண முடிநத்து. நல்ல குளுகுளு வசதியுடன் இருந்தது. மொபைல் ஜார்ஜிங் வசதி இருந்ததையும் காண முடிந்தது. அரசு கூறியபடியே 25 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்தது. டெலிவரிக்கு இடையில் ஓய்வு எடுக்கக் கூடிய வகையில் பாதுகாப்பாக சுகாதாரமான முறையில் இருந்தது. இதற்கு அடுத்து வேளச்சேரி, மதுரவாயில், அம்பத்தூர் ஆகிய இடங்களிலும் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்த ஊழியர்கள், இதை அமைத்து தந்த அரசுக்கு நன்றி தெரிவித்தனர். அதேநேரம் ஏசி ஓய்வறையை வரவேற்ற பொதுமக்கள், இதை அரசு நன்றாக அமைத்துள்ளது என்று பாராட்டினார். ஆனால் எப்படி அரசு பராமரிக்க போகிறது என்பதை பொறுத்தே இது எந்த அளவிற்கு பயனுள்ள திட்டமாக இருக்கும் என்பதை கணிக்க முடியும் என்று பொதுமக்கள் கூறினார்கள். ஆம்.. அரசு என்ன தான் புதிய வசதிகளை உருவாக்கினாலும், அது தொடர்ந்து பராமரிக்கப்பட்டால் தான் பயனுள்ளதாக இருக்கும். இல்லாவிட்டால் வெறும் காட்சி பொருளாக மட்டுமே இதை மக்கள் பார்ப்பார்கள்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications