பால், குடிநீரை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்! புயல் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி
சென்னை: இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் உருவான டிட்வா புயல், கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டை நோக்கி முன்னேறி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக பொதுமக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது.
அதில், "டிட்வா புயல், கனமழை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்க வேண்டும். பொதுமக்கள் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்ல வேண்டாம். குறிப்பாக மரங்களின் கீழ் நிற்க வேண்டாம். பால், குடிநீர், மெழுகுவர்த்தி, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

தற்போது நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. இலங்கையில் புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. புயல் உருவாக்கிய மழை வெள்ளத்தால், சுமார் 56 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 19 மாவட்டங்களுக்கு மிதமான வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications