50 பெண்கள்.. 500 ஆண்கள்! எம்எல்ஏவுக்கு சொந்தமான ஈசிஆர் ரிசார்ட்டில் போதை பார்ட்டி? போலீசார் விசாரணை
சென்னை: சென்னை கிழக்கு கடற்கறை சாலையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் போதை பொருள் பார்ட்டி நடைபெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து அங்கு போலீசார் ரெய்டு நடத்தினர். வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மவுலானாவிற்கு சொந்தமான ரிசார்ட் இது என்று கூறப்படுகிறது.
சென்னை ஈசிஆர் பகுதியில் பல்வேறு ரிஸார்ட்டுகள் உள்ளன. இங்கு அவ்வப்போது போதை பொருள் பயன்படுத்தி பார்ட்டிகள் நடப்பதாக கொடுக்கப்படும் புகார்களை வைத்து போலீஸ் ரெய்டு நடத்தப்படுவது வழக்கம்.
இந்த நிலையில்தான் நேற்று நள்ளிரவில் கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ரெய்டு நடத்தப்பட்டது. தாம்பரம் காவல் ஆணையர் ரவி ஆணையின்படி இந்த ரெய்டு நடத்தப்பட்டது.

ஹோலி
ஹோலியை முன்னிட்டு இந்த ரிசார்டில் பெரிய பார்ட்டி நடத்தப்பட்டு இருக்கிறது. இதை பற்றி தகவல் கிடைத்து உடனடியாக மது மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் இங்கே விரைந்து சென்று சோதனை செய்தனர். நேற்று இரவு 1 மணிக்கு இந்த ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது அங்கே முழு போதையில் சிலர் பார்ட்டி நடத்தி வந்துள்ளனர்.

கைது
இதையடுத்து உள்ளே புகுந்த போலீசார் அங்கு மது விருந்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த 500 ஆண்களை கைது செய்தனர். அதோடு அங்கு அரைகுறை உடையுடன், நடனமாடிக்கொண்டு இருந்த 50 பெண்களை கைது செய்தனர். பல்வேறு பாடல்களுக்கு மாலையிலிருந்து இரவு வரை இவர்கள் நடனம் ஆடியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த ரிசார்டில் இருந்த மேனஜர் சைமனையும் போலீசார் கைது செய்தனர். இரவு 1 மணியில் இருந்து காலை 3 மணி வரை இந்த ரெய்டு நடத்தப்பட்டது.

என்ன நடந்தது?
வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மவுலானாவிற்கு சொந்தமான ரிசார்ட் இது என்று கூறப்படுகிறது. தகவல் கேட்டறிந்த வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மவுலானா உடனே சம்பவ இடத்திற்கு வந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு தாம்பரம் காவல் ஆணையர் ரவி நேரில் வந்தார். அங்கு ரிசார்ட் நிர்வாகிகளிடம் இவர் விசாரணை மேற்கொண்டார்.

என்ன சொன்னார்?
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தாம்பரம் காவல் ஆணையர் ரவி, இங்கே நடனம் ஆடியவர்கள் , பார்டியில் கலந்து கொண்டவர்களை கைது செய்து இருக்கிறோம். ஆனால் இவர்களிடம் இருந்து போதை பொருட்களை நாங்கள் பறிமுதல் செய்யவில்லை. இது என்ன மாதிரியான பார்ட்டி என்று விசாரித்து வருகிறோம். இவர்கள் சட்ட ஒழுங்கை மீறி செயல்பட்டு உள்ளனரா என்று விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்.
-
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications