சென்னை - திருச்சிக்கு இன்று சிறப்பு ரயில்.. இரவு 11.10 மணிக்கு எழும்பூரில் புறப்படுகிறது
சென்னை: தொடர் விடுமுறையையொட்டி சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு இன்று இரவு 11.10 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
நாளை வெள்ளிக்கிழமையில் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அதன் பிறகு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். இந்நிலையில் தான் தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர்.

பஸ், ரயில்களில் அதிகளவில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் தான் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை எழும்பூர் - திருச்சி இடையே முன்பதிவில்லாத மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (வண்டி எண் 06161) இன்று இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இன்று இரவு 11.10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும்.
அதன்பிறகு இரவு 11.40 மணிக்கு தாம்பரம், 12.10 மணிக்கு செங்கல்பட்டு ஸ்டேஷனில் இருந்து புறப்படும். பிறகு இரவு 12.35 மணிக்கு மேல்மருவத்தூர், இரவு 1 மணிக்கு திண்டிவனம், இரவு 2.30 மணிக்கு விழுப்புரம், இரவு 2.57 மணிக்கு பண்ரூட்டி, 3.32 மணிக்கு கடலூர், 4.04 மணிக்கு சிதம்பரம், 4.22 மணிக்கு சீர்காழி ரயில் நிலையங்களில் நின்று புறப்படும்.
அதன்பிறகு அதிகாலை 4.52 மணிக்கு மயிலாடுதுறை, 5.30 மணிக்கு கும்பகோணம், 5.42 மணிக்கு பாபநாசம், 6.02 மணிக்கு தஞ்சாவூர், 6.22 ணிக்கு புடலூர், 6.40 மணிக்கு திருவெறும்பூர் ரயில் நிலையங்களை அடைந்து புறப்படும். இறுதியாக காலை 7.30 மணிக்கு திருச்சியை சென்றடையும். இந்த ரயில்களில் முன்பதிவு கிடையாது என்பதால் ஸ்டேஷன்களில் டிக்கெட் எடுத்து பொதுமக்கள் பயணிக்கலாம்.
மறுமார்க்கமாக வரும் 17 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.50 மணிக்கு திருச்சியில் இருந்து திருச்சி - சென்னை தாம்பரம் மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06162) புறப்பட்டு மறுநாள் (திங்கட்கிழமை - ஆகஸ்ட் 18) காலை 6.10 மணிக்கு சென்னை தாம்பரத்தை வந்தடையும் என்று தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications