Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி போன் போட்டும் கூட.. இப்படி ஆகிடுச்சே.. சென்னைக்கு வர வேண்டிய தரமான சம்பவம்.. போச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் பறக்கும் ரயில் (MRTS) சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) கையகப்படுத்தும் திட்டத்தில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட இந்திய ரயில்வே இன்னும் அனுமதி அளிக்காததே இந்தத் தாமதத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

metro

முக்கியத் தகவல்கள்:

ஒப்பந்த நிலவரம்: கடந்த ஜூலை மாதம் ரயில்வே வாரியம் இதற்கான கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது. இதனைத் தொடர்ந்து, ஐந்து மாதங்களுக்கு முன்பே தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைவு நகலை ரயில்வேக்கு அனுப்பியது.

தாமதத்திற்கான காரணம்: ரயில்வேயின் பல்வேறு துறைகள் இந்த ஆவணத்தை ஆய்வு செய்து வருகின்றன. சில துறைகள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இன்னும் சில துறைகளின் இறுதி அனுமதி நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது.

புதிய காலக்கெடு: முதலில் கடந்த டிசம்பர் மாதமே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதுள்ள சூழலில், இது பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் தொடக்கத்தில் தான் சாத்தியமாகும் எனத் தெரிகிறது.

இந்தக் கையகப்படுத்துதல் நடைமுறை முடிவுக்கு வந்தால்தான், பறக்கும் ரயில் நிலையங்களில் மெட்ரோ தரத்திலான வசதிகள், புதிய ஏசி பெட்டிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுவர முடியும். இந்தத் தொடர் தாமதம் தினசரி பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மெட்ரோ ரயில் - மின்சார ரயில்

முன்னதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், சென்னை எம்.ஆர்.டி.எஸ் (பறக்கும் ரயில்), சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டுக்கு மாற்றப்படுவதற்கான சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்தார். இந்த நடவடிக்கை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சென்னையில் உள்ள எம்.ஆர்.டி.எஸ்., சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டுக்கு மாற்றப்படுவது குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த குழுவின் செயல்பாடுகள் விரைவில் தொடங்கப்படும். இது குறித்த கூடுதல் தகவல்களை அதிகாரிகள் வழங்குவார்கள்.

மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவை இணைந்து செயல்படுவதன் மூலம் இந்த மாற்றம் நிகழும். இந்த நடவடிக்கையின் மூலம், ரயில் சேவைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும், பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து வசதிகள் கிடைக்கும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் (CMRL) பறக்கும் ரயில் (MRTS) இணைப்பதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த திட்டத்தை விரைவுபடுத்த பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இணைப்பு

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, சுமார் 90% பணிகள் நிறைவடைந்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தென்னக ரயில்வே இந்த திட்டத்தை காலதாமதப்படுத்திய நிலையில், தற்போது பிரதமர் அலுவலகம் இதில் நேரடியாக ஈடுபட்டுள்ளது. ஆனால் பிரதமர் அலுவலகம் தலையிட்டு கூட பணிகள் இன்னும் நிறைவு பெறாமல் தாமதம் ஆகி உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது அளித்த மனுவில், சென்னை பறக்கும் ரயில் சேவையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடி தென்னக ரயில்வேயின் தாமதத்தைக் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலகம் ரயில்வே வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமத்தின் (CUMTA) அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த சந்திப்பைத் தொடர்ந்து, இந்த திட்டப் பணியை விரைவுபடுத்தும்படி பிரதமர் அலுவலகம் ரயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேயிடம் மூன்று கேள்விகளை எழுப்பியது. ரயில்வே வாரியம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

ரயில்வே வாரியம் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டு விட்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் (CUMTA) கடந்த இரண்டு வருடங்களாக இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 2024 பிப்ரவரி மாதம் இது தொடர்பான திட்ட அறிக்கையை ரயில்வே வாரியத்திற்கு அனுப்பியது. ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில், பறக்கும் ரயில் நிலையத்தை கையகப்படுத்தும். இதைத் தொடர்ந்து, பறக்கும் ரயில் நிலையங்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. CMRL மல்டி மாடல் ஹப்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

சென்னையில், புறநகர் மற்றும் MRTS ரயில்கள் அல்லது மெட்ரோ ரயில் பாதைகளுக்கு பயணிகள் எளிதாக மாற முடியும். 23 இடங்களில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. 2026-ஆம் ஆண்டில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்போது இந்த வசதி பயன்பாட்டுக்கு வரும். சர்வதேச நாடுகளில் உள்ள இந்த வசதி விரைவில் சென்னையில் அமலுக்கு வரவுள்ளது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமத்தின் திட்ட அறிக்கையின்படி, பறக்கும் ரயில் சேவையின் ஒரு வருட இயக்கச் செலவு சுமார் ரூ.104 கோடி. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் சுமார் ரூ.50 கோடி மட்டுமே. மெட்ரோ ரயில் திட்டம் நீண்ட காலமாக தாமதமாகி வருவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருவான்மியூர் மற்றும் திருமயிலையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் MRTS நிலையங்களுடனும், மந்தவெளி மற்றும் மாதவரத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்களுடனும் இணைக்கப்படும். மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 45.4 கி.மீ. மெட்ரோவில் ஒன்பது மையங்கள் அமைக்கப்படும். கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 26.1 கி.மீ மெட்ரோ-4ல், கோடம்பாக்கம், ஐயப்பன்தாங்கல், பூந்தமல்லி பேருந்து நிலையம், நந்தனம் மற்றும் வடபழனி ஆகிய ஐந்து மையங்கள் அமைக்கப்படும். 44.6 கி.மீ மெட்ரோ-5ல், மாதவரம் பேருந்து நிலையம், வில்லிவாக்கம் பேருந்து நிலையம், அண்ணாநகர், கோயம்பேடு, ஆலந்தூர், செயின்ட் தோமஸ் வில்லிவாக்கம், வாணுவம்பேட்டை, கீழ்கட்டளை ஆகிய இடங்களில் ஒன்பது மையங்கள் அமைக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+