ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்
சென்னை: பொங்கல், தீபாவளி என்றால் ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கும். அதுபோலவே தற்போது சென்னை வரும் விமானங்களின் கட்டணமும் 3 மடங்கு அதிகரித்திருக்கிறது.
தனியார் டிரான்ஸ்போர்ட் என்றாலே இதுதான் பெரிய தலைவலி. ஆள் இல்லாத நேரத்தில் ஆஃபராக போட்டு தள்ளுவார்கள். பயணிகள் கூட்டம் வந்துவிட்டால் இதுதான் சான்ஸ் என்று, கட்டணத்தை ஒரேயடியாக ஏற்றிவிடுவார்கள். தற்போது ஏர்லைன் நிறுவனங்கள் இதைத்தான் செய்திருக்கின்றன.

என்ன நடந்தது?
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், மக்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி படையெடுக்க தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக சென்னையிலிருந்து வெளியூர் சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்ப உள்ளனர். இப்படி இருக்கையில்தான், சென்னைக்கு வரும் விமானங்களின் கட்டணம் எகிறியிருக்கிறது.
விமான கட்டணம்
வழக்கமான நாட்களில் மதுரையிலிருந்து சென்னை வருவதற்கு விமான கட்டணம் ரூ.5,800 ஆக இருக்கும். இப்போது பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதால், கட்டணம் ரூ.17,500 அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதேபோல, சாதாரண நாட்களில் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வர ரூ.6300 கட்டணமாக இருந்தது. இது தற்போது ரூ.17,300 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
மட்டுமல்லாது, போதுமான அளவு இருக்கை இல்லாததால், மக்களால் பணம் கொடுத்தும் பயணிக்க முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. விமானங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால் டிக்கெட் கிடைப்பதில்லை என்று மக்கள் புலம்புகின்றனர்.
பண்டிகை நாட்களில் விமான நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான். இருப்பினும், பள்ளி திறக்கும் நேரத்தில் இப்படி கட்டணத்தை உயர்த்தியிருப்பது மக்களை அதிருப்தியடைய செய்திருக்கிறது.
ஏன் இந்த கட்டண உயர்வு?
விமான நிறுவனங்கள் 'டைமிங் பிரைசிங்' என்கிற கட்டண கொள்கையை பின்பற்றுகின்றன. அதாவது, விமானத்தில் உள்ள மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை நிலையானது. கோடை விடுமுறை முடிவு, பண்டிகை காலங்கள் அல்லது அவசரக் காலங்களில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் குறிப்பிட்ட ஒரு சில இருக்கைகளுக்காகப் போட்டியிடுகின்றனர்.
விமான நிறுவனங்களின் கொள்ளை
விமான நிறுவனங்களின் கம்ப்யூட்டர் மென்பொருள், தங்களின் இணையதளத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் வருகை மற்றும் தேடல்களின் எண்ணிக்கையை நொடிக்கு நொடி கண்காணித்துக் கொண்டே இருக்கும். தேவை அதிகமாக இருப்பதை அறிந்தவுடன், அது தானாகவே விலையை உயர்த்தத் தொடங்கிவிடும்.
விமான நிறுவனங்கள் ஒரு விமானத்தில் உள்ள அனைத்து எகானமி இருக்கைகளையும் ஒரே விலையில் விற்பதில்லை. அவசியத்திற்கு ஏற்ப அவற்றை வெவ்வேறு விலைப் பெட்டிகளாக பிரித்து வைப்பார்கள்.
அதிக விலை
உதாரணமாக, முதல் 20 இருக்கைகள் ₹4,000 என குறைந்த விலையிலும் , அடுத்த 30 இருக்கைகள் ₹7,000 என நடுத்தர விலையிலும் பிரிக்கப்படும். கடைசி நேர இருக்கைகள் ₹15,000 வரை மிக அதிக விலைக்கு விற்கப்படும்படி அல்காரிதம் வடிவமைக்கப்பட்டிருக்கும். முந்தைய பெட்டிகள் காலியாகக் காலியாக, தானாகவே அடுத்த அதிக விலை கொண்ட பெட்டியின் டிக்கெட்டுகள் விற்பனைக்கு வரும். இதனால்தான் கோடை விடுமுறை முடிவு, பண்டிகை காலங்கள் அல்லது அவசரக் காலங்களில் விமான டிக்கெட்கள் அதிகரிக்கின்றன.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications