Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chennai Guindy Metro: சென்னைக்கு நடுவே.. கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் வரும் அதிரடி மாற்றம்! CMRL புது திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைந்துள்ள பகுதியில் பல அடுக்குகளைக் கொண்ட கட்டிடத்தை கட்ட மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் மெட்ரோ, புறநகர் ரயில் நிலையம், பேருந்து நிலையம் என பல்முனை வசதிகள் ஒரே இடத்தில் கொண்டு வர சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது

கிண்டி புறநகர் ரயில் நிலையத்தை ஒட்டியே மெட்ரோவும் அமைக்கப்பட்டிருப்பதால் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் இந்த பாதையில் பயணிக்கின்றனர். இதனை பல்முனை வசதி வளாகமாக மாற்ற மெட்ரோ திட்டமிட்டிருக்கிறது. இதற்காக கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள 3.48 ஏக்கர் நிலப்பரப்பை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் இதற்காக அடையாளம் கண்டுள்ளது.

Guindy metro

பிராட்வேயில் அமையவிருக்கும் பிரம்மாண்டமான பல்முனை வசதி வளாகத்தைப் போலவே, பேருந்து நிறுத்தங்கள், சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் வணிக இடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மெட்ரோ ரயில் வலையமைப்பில் கிண்டி மிகவும் பரபரப்பான நிலையங்களில் ஒன்றாகும். இங்கு தினசரி 15,000 முதல் 17,000 பயணிகள் வந்து செல்கின்றனர். அருகிலேயே புறநகர் ரயில் நிலையம் இருப்பதால், பல பயணிகள் இந்த இடத்தில் இரு போக்குவரத்து வசதிகளையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் இந்த திட்டம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், "கிண்டியில் அமையவிருக்கும் இந்த பல மாடி கட்டிடம் பிராட்வேயில் உள்ளதைப் போல பெரியதாக இருக்காது. இருப்பினும், நகரத்திற்குள்ளும், வெளியூர்களுக்கும் செல்லும் பேருந்துகளுக்கான ஒரு மாற்று மையம், பேருந்து நிறுத்தங்கள், மற்றும் மேல் தளங்களில் சில்லறை மற்றும் வணிக இடங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இங்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான போதுமான வாகன நிறுத்துமிட வசதிகளையும் வழங்குவோம்.

கிண்டியில் உள்ள இந்த நிலப்பரப்பு விமான நிலையத்திற்கு மிக அருகில் இருப்பதாலும், விமானப் பாதைக்கு அருகாமையில் இருப்பதாலும், இந்திய விமான நிலைய ஆணையத்திடம் (AAI) இருந்து உரிய அனுமதி பெற வேண்டும். அதன் பிறகு எத்தனை தளங்கள் கட்டலாம் என்பதை முடிவு செய்வோம். தற்போது, ஆறு முதல் ஏழு தளங்கள் கட்ட திட்டமிட்டுள்ளோம்" என்று கூறியுள்ளனர்.

இந்த பல மாடி கட்டிடம் கட்டுவதற்கும், மெட்ரோ நிலையத்துடன் இணைப்பதற்கும் ஒரு திட்டத்தை வகுக்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு ஆலோசகரைத் தேர்வு செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. "மெட்ரோ நிலையம், புறநகர் நிலையம் மற்றும் கட்ட திட்டமிடப்பட்டிருக்கும் கட்டிடத்தை லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர்களுடன் இணைக்கும் ஒரு பாதசாரி மேம்பாலத்தை அமைக்க திட்டமிட்டுள்ளோம்" எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

போக்குவரத்து ஆய்வுகள், அடுத்த இருபது ஆண்டுகளில் இந்த சந்திப்பில் எதிர்பார்க்கப்படும் மக்கள் நடமாட்டத்தின் மதிப்பீடு, திட்டத்தின் இறுதி செலவு மதிப்பீடு, கட்டுமான காலம் மற்றும் பிற அம்சங்கள் உட்பட பல ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு ஒரு விரிவான அறிக்கை தயார் செய்யப்படும். அடுத்த மூன்று மாதங்களுக்குள், ஆலோசனைப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை CMRL இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+