எச்ஐவி பாதிப்பு ரத்தத்தை முறையாக பரிசோதிக்காதது ஏன்?- உயர்நீதிமன்றம் கேள்வி
Recommended Video

சென்னை: எச்ஐவி பாதிப்பு ரத்தத்தை முறையாக பரிசோதனை செய்யாதது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையிலிருந்து தானமாக பெறப்பட்ட எச்ஐவி பாதிப்புள்ள ரத்தம் சாத்தூர் மருத்துவமனையில் அவருக்கு ஏற்றப்பட்டது.
இதனால் அந்த பெண்ணுக்கும் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டது. இது முழுக்க முழுக்க ரத்த வங்கி ஊழியர்களின் அலட்சியம் என கூறி 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் அந்த கர்ப்பிணிக்கு அரசு சார்பில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து அவசர வழக்காக விசாரிக்க வழக்கறிஞர் நீலமேகன் என்பவர் மதுரை கிளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக விசாரிக்க முன்வந்தது.
இதுகுறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அமர்வு கூறுகையில் ரத்தத்தை முறையாக பரிசோதிக்காதது ஏன்.
கர்ப்பிணிக்கான சிகிச்சை, சிசுவுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க எடுக்கும் நடவடிக்கை என்ன என்பது குறித்து ஜனவரி 3-ஆம் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications