ஏ.ஆர். ரஹ்மானுக்கு சேவை வரி விதித்து ஜிஎஸ்டி ஆணையம் நோட்டீஸ்.. ஹைகோர்ட் புதிய உத்தரவு
சென்னை: ஏ.ஆர் ரஹ்மானுக்கு சேவை வரி தொடர்பாக வருமான வரித் துறை விதித்த நோட்டீஸுக்கு வரும் 4-ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஆஸ்கர் நாயகனும் இந்திய திரையுலகின் இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில் நான் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறேன்.

ஒரு இசையமைப்பாளரான எனக்கு எனது படைப்பு மீது முழுமையான காப்புரிமை இருக்கிறது. அந்த உரிமையை தயாரிப்பாளருக்கு அளித்து விட்டால் சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
எனது படைப்புகளுக்கான முழு காப்புரிமையை தயாரிப்பாளர்களுக்கு நான் வழங்கியுள்ளேன். இதற்காக நான் சேவை வரி செலுத்த வேண்டும் என ஜிஎஸ்டி ஆணையர் எனக்கு நோட்டீஸ் அக்டோபர் 17-ஆம் தேதி அனுப்பியுள்ளார்.
ஒரு பாடலுக்கான இசையை தயாரிப்பாளருக்கு வழங்குவது என்பது சேவை அல்ல. எனவே எனக்கு சேவை வரி விதித்ததே தவறு. ஜிஎஸ்டி ஆணையர் எனக்கு அனுப்பிய நோட்டீஸ் மீது தடை விதிக்க வேண்டும், அதை ரத்து செய்யவும் வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
இந்த மனு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸிற்கு வரும் 4-ஆம் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஜிஎஸ்டி ஆணையர் இன்னும் 15 தினங்களுக்குள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications