சென்னை உயர்நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக ஏ.பி. சாஹி பதவியேற்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி. சாஹி இன்று பதவியேற்றார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணியை கொலிஜீயம் பரிந்துரைத்ததன் பேரில் மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரமாணி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான அமரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாகவும் சுதந்திர இந்தியாவின் 30-ஆவது தலைமை நீதிபதியாகவும் ஏபி சாஹி இன்று பதவியேற்று கொண்டார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர், சபாநாயகர் தனபால், சட்டத் துறை அமைச்சர் சிவி சண்முகம், மற்ற துறை அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவர் 1985-ஆம் ஆண்டு முதல் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். இதையடுத்து 2005-ஆம் ஆண்டு முதல் அலகாபாத் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார். 2018-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி முதல் பாட்னா தலைமை நீதிபதியாக பதவியேற்றார். 1959-ஆம் ஆண்டு பிறந்தார் சாஹி.
-
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
நீதிபதிகள் புனித பசுக்கள் இல்லை.. நீதித்துறையில் ஊழல் இல்லைனு சொல்ல முடியாது – சென்னை ஹைகோர்ட் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
இஸ்லாமிய மன்னர்களே பசுக்களை வெட்டியது இல்லை.. தீர்ப்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சொன்னது என்ன? -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்












Click it and Unblock the Notifications