திருவண்ணாமலை தேர் வலம் வரும் வீதியில் கான்கிரீட் சாலைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி.. ஹைகோர்ட் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவண்ணாமலை அருணாச்சலசேசுவரர் கோவிலின் தேர் வலம் வரக் கூடிய பெரிய வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில் தேர் வலம் வரும் பெரிய வீதியில் தார் சாலைக்கு பதில் காங்கிரீட் சாலை அமைக்க தடை விதிக்க கோரி திருவண்ணாமலை எடப்பாளத்தை சேர்ந்த சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Chennai HC dimissed the plea seeking to ban road construction in chariot road

சாலையை காங்கிரீட் சாலையாக மாற்றினால் தேர் வலம் வருவதில் சிக்கல் உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு முன்வந்த போது, 70சதவீத பணிகள் முடிந்து விட்டதாகவும், அடுத்த மாதம் பணிகள் முழுமையாக முடிந்து விடும் எனவும் பல கோவில்களில் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளதாகவும், தேர்களில் ஹைட்ராலிக் பிரேக் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கான்கிரீட் சாலையில் தேர் வலம் வருவதில் சிக்கல் உள்ளது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+