அமைச்சர் சிவசங்கருக்கு எதிரான 9 வழக்குகள்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
சென்னை : போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 9 வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது, விதிகளை மீறி போராட்டங்களில் ஈடுபட்டதாக, எஸ்.எஸ்.சிவசங்கருக்கு எதிராக அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை எதிர்த்து சிவசங்கர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.
உள்நோக்கத்துடன் தன்னை புண்படுத்தும் நோக்கில், அதிமுக அரசின் காவல்துறை வழக்குப் பதிவு செய்ததாக அமைச்சர் சிவசங்கர் தரப்பு வாதம் வைத்தது. இந்நிலையில் இன்று அமைச்சர் சிவசங்கர் மீதான 9 வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்.













Click it and Unblock the Notifications