அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான புகாரில் மேல் நடவடிக்கை: ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் பொருட்கள் கொள்முதல் செய்ததில் ரூ. 350 கோடிக்கு முறைகேடு செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், காமராஜூக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளித்துள்ளது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் உணவு வழங்கல் துறை அமைச்சராக பதவி வகித்த காமராஜ் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பருப்பு எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக அளித்த புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த வா.புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 Chennai HC to hear case against AIADMK former minister Kamaraj

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேடு குறித்து 2018 ஆம் ஆண்டு புகார் அளித்ததாகவும், இதற்கு 2022ம் ஆண்டு விரிவான விசாரணை நடந்து வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளித்ததாகவும் மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை விதிகளின்படி ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்பதால் இந்த வழக்கில் உடனடியாக விசாரணையை முடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், மனுதாரருடன் சேர்த்து மூன்று பேர் இதே புகாரை தெரிவித்துள்ளதாகவும் அந்த புகார்கள் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி தற்போது விரிவான விசாரணை துவங்கி உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது என்றும் 31 டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்து உண்மையான இழப்பை கண்டறிய வேண்டி உள்ளது என்றும் விசாரணை முடியும் முன்பு மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுதாரர் அளித்த புகாரின் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை நவம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். இந்த நிலையில் இந்த வழக்கானது நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்நா ஆஜரானார். அந்த புகார் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. 49 ஒப்பந்த புள்ளிகள் தொடர்பான ஆவணங்கள் 24 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ளதால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதனால் விசாரணைக்கு கால வரம்பு நிர்ணயிக்க இயலாது என்றார்.

அப்போது அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.சுரேஷ் இதே குற்றச்சாட்டில் தங்கள் தரப்பில் அளிக்கப்பட்டு வரும் புகாரிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதனால் தாங்களும் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணை நவம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி , இரு வழக்குகள் தொடர்பாக விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். அந்த வகையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

இன்றைய விசாரணையின்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+