உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒவ்வொரு பஞ்சாயத்திலும் வார்டு வாரியாக இறந்த மற்றும் இடம் மாறிய வாக்காளர்களின் பெயர்களை நீக்கம் செய்து ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, இந்திய தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் ஆணையமும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளதால், ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

election high court chennai

பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்காக, வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையத்திடம், மாநில தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. இந்நிலையில், தற்போதைய வாக்காளர் பட்டியலில் இருந்து, இறந்த மற்றும் இடம் மாறிய வாக்காளர்களின் பெயர்களை நீக்கக் கோரி, அதிமுக வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் மதுரை வீரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், இறந்த மற்றும் இடம் மாறிய வாக்காளர்களின் பெயர்களை நீக்காவிட்டால், அந்தப் பெயர்களில் கள்ள ஓட்டுக்கள் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் நெடுஞ்செழியன் ஆஜராகி, வாதம் வைத்தார்.

பின்னர் உத்தரவிட்ட மனுவுக்கு நவம்பர் 28 ஆம் தேதி பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+