"ரூ.13 கோடி வரி பாக்கி!" ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான மறைந்த ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில் ரூ.13 கோடி ரூபாய் வரியை அவரது சட்டப்பூர்வ வாரிசு செலுத்த வேண்டும் என ஜெ. தீபாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இது தொடர்பான வழக்கில் வருமான வரி வசூல் நடவடிக்கையை இரண்டு வாரங்கள் நிறுத்தி வைக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது வருமான வரி வழக்கு நடந்து வந்தது. அந்த வருமான வரி வழக்கில் ஜெயலலிதா தரப்பு 13 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று அவரது சட்டப்பூர்வ வாரிசான ஜெ. தீபாவுக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசுக்கு எதிராக ஜெ தீபா தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

தொடர்ந்து இந்த வழக்கில் மற்றொரு சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக்கும் இணைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தீபா தரப்பில் வருமான வரித் துறை சரியான தொகையைக் குறிப்பிடவில்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
அதாவது முதலில் வருமான வரிப் பாக்கி 36 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதாகவும் பிறகு 13 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.. மேலும், சரியான தொகையைத் தெரிவித்தால், வரி நிலுவையைச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது..
இதைக் குறித்துக் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி, வரிப் பாக்கி குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கு நேற்றைய தினம் நீதிபதி சி.சரவணன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என தீபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தீபா தரப்பு வழக்கறிஞர், "வருமான வரிப் பாக்கி குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், வருமான வரித்துறை பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை" என்றார்.
இதையடுத்து ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வசூல் நடவடிக்கையை நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்ட வருமான வரித்துறை, அதுவரை வருமான வரிப் பாக்கி வசூல் நடவடிக்கை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications