டிடிவி தினகரன் தேர்தல் விதிமீறல் செய்யவில்லை.. உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, முதுகுளத்தூர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட்ட முருகன் என்பவரை ஆதரித்து டிடிவி.தினகரன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Chennai High Court ordered to quash the election violation case against TTV Dhinakaran

அப்போது, 10 கார்கள் மற்றும் 40 இரு சக்கர வாகனங்களுடன் சென்றதுடன், ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தி, பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, தேர்தல் விதிகளை மீறியதாக, கமுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி டிடிவி.தினகரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில், இந்த குற்றச்சாட்டில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்விற்கு 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், டிடிவி.தினகரன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+