Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நியோமேக்ஸ் வழக்கு: தொடர்ந்து குவியும் புகார்கள்.. அசையும் சொத்துகளை ஏலம் விட ஐகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அசையும் சொத்துகளை வரும் 31 ஆம் தேதி பொது ஏலம் மூலம் விற்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தங்கம், வெள்ளி நகைகளை ஏலம் விட எந்த ஆட்சேபனையும் இல்லை என நீதிமன்றத்தில் நியோமேக்ஸ் நிறுவனம் தரப்பு தெரிவித்தது.

மதுரையை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு முழுவதும் நியோமேக்ஸ் பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு பாளையங்கோட்டை, கோவில்பட்டி, திருச்சி, தஞ்சை என பல மாவட்டங்களில் அலுவலகங்கள் செயல்பட்டன. இந்த நிதி நிறுவனத்தின் இயக்குநர்களாக வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் செயல்பட்டனர்.

neo max scam neo max case money cheating case m

நியோமேக்ஸ் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, இரட்டிப்பு பணம் வழங்குவதாக கூறி தமிழகம் முழுவதும் முதலீட்டாளர்களைச் சேர்த்தனர். பணத்தைத் திருப்பித் தராமல் முதலீட்டாளர்களை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக நியோமேக்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக மதுரை, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குகள் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் ஆர்.முனியப்பராஜ், நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக ஏற்கனவே 24,000 புகார்கள் பெறப்பட்ட நிலையில், மேலும் புதிதாக 32,000 புகார்கள் பெறப்பட்டதாக கூறினார். இந்த புகார்களின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், புகார் அளிக்க இன்றைய தினமே கடைசி நாள் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

நியோமேக்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா, நிறுவனத்திற்கு சொந்தமான தங்க மற்றும் வெள்ளி நகைகள், கார், ட்ரக் உள்ளிட்டவைகளை ஏலம் விடுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனக் கூறினார். இதனையடுத்து, கார், ட்ரக் உள்ளிட்ட அசையும் சொத்துகளை பொது ஏலம் விடுவது தொடர்பாக வரும் 17 ஆம் தேதிக்குள் அறிவிப்பு வெளியிட்டு 31 ஆம் தேதி ஏலத்தை நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.

தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் ஏலம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட பின்னர், ஏலம் கோரும் தொகை குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, ஏலம் தேதி குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் மூன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+