சரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஹைகோர்ட் அனுமதி
சென்னை: சரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்னை ஹைகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
ஜீவஜோதியை 3-ஆவதாக திருமணம் செய்து கொள்ள விரும்பிய சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால், அவரது கணவர் சாந்தகுமாரை கடந்த 2001-ஆம் ஆண்டு கடத்தி கொன்றார்.

இந்த வழக்கில் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து ராஜகோபால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து அவர் கடந்த 9-ஆம் தேதி சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
உடல்நிலையை கருத்தில் கொண்டு தனக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும்படி ராஜகோபால் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்டு ஒரு நாள் கூட சிறையில் இல்லாமல் நேரடியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவரது உடல்நிலை மோசமாகியுள்ளதாகவும் அவருக்கு செயற்கை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தெரிவித்தது. இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுக்க வேண்டும் என அவரது மகன் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரிக்கப்பட்ட நிலையில் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க சென்னை ஹைகோர்ட் அனுமதித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications