சென்னை ராயபுரத்தில் காலையிலேயே வந்த அதிகாரிகள்.. 40 வீடுகள் அதிரடியாக இடித்து அகற்றம்
சென்னை: சென்னையில் பொதுவாகவே ஆக்கிரமிப்புகளை அரசு அனுமதிப்பது இல்லை.. இதுவரை பட்டா வாங்காத நிலங்களாக இருந்தால் அல்லது வீடுகளாக இருந்தால், கிடைப்பது மிகவும் கடினம். என்றாவது ஒரு நாள் சிக்கல் வரும். ஏனெனில் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்தவர்ளுக்கு அடுக்குமாடியில் குடியிருப்புகளைதரும் அரசு, அவர்களை வெளியேற்றி வருகிறது. அந்த வகையில் சென்னை மூலக்கொத்தளத்தில் 40 ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இடித்து அகற்றியிருக்கிறார்கள்..
சென்னையில் ஆக்கிரமித்து குடியிருப்போர் கண்டிப்பாக மாற்று இடங்களை நாட வேண்டும். அல்லது பட்டா வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் பட்டா இல்லாமல் பல வருடம் அரசு நிலத்தில் குடியிருப்போருக்கு பின்னாளில் சிக்கல் வரலாம். அரசு நீர்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் பாதை ஆக்கிரமிப்பு, சாலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் எந்த கருணையும் காட்டுவது இல்லை.. எத்தனை வருடம் ஆனாலும் இடித்து தரைமட்டம் ஆக்கிவிடுகிறது.

வீடுகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு
நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தாலும், ஆக்கிரமிப்புகள் விவகாரத்தில் அவர்களுக்கு எந்த சாதகமான உத்தரவும் கிடைக்கப்போவது இல்லை.. ஏனெனில் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் கடும் நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் சென்னை மூலக்கொத்தளத்தில் 40 ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இடித்து அகற்றியிருக்கிறார்கள்..
ராயபுரத்தில் 150 வீடுகள்
சென்னை ராயபுரம் 53-வது வார்டுக்கு உட்பட்ட மூலக்கொத்தளம் பேசின் பிரிட்ஜ் சாலையில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் இருக்கிறது. இந்த இடத்தை 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி வசித்து வந்தார்கள். மாநகராட்சி அதிகாரிகள் 150 குடும்பங்களுக்கு மூலக்கொத்தளம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை வழங்கி காலி செய்ய வைத்தது. மீதமுள்ள 40 குடும்பத்தினர் அங்கேயே வசித்து வந்தனர். அவர்களை காலி செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்திய நிலையில் தங்களுக்கு இந்த இடத்திலேயே வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கேட்டு வந்தார்கள்.
சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு
இதையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று 40 ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்ற பொக்லைன் எந்திரங்களுடன் அங்கு சென்றார்கள். வீடுகளை இடிப்பதற்கு ஏதுவாக பாதுகாப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புக்காரர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் போலீசார் உதவியுடன் அதிகாரிகள் வீடுகளில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்து மின் இணைப்பைத் துண்டித்து வீடுகளை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள்.
சாலை மறியல்
அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த பொதுமக்கள் திடீரென அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர். பின்னர் 40 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன. இந்த சம்பவத்தால் மூலக்கொத்தளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications