நர்ஸ் உடை மாற்றியதைப் பார்த்து சபலமடைந்தேன்.. கைதான மருத்துவமனை ஊழியர் பரபர வாக்குமூலம்
சென்னை: உடைகள் மாற்றும் அறையில் எத்தேச்சையாக சென்ற போது ஒரு செவிலியர் உடை மாற்றுவதை கண்டதிலிருந்து தனக்கு சபல புத்தி ஏற்பட்டதாக சென்னை தனியார் மருத்துவமனையில் கழிவறையில் கேமரா வைத்து கைதான பிரகாஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் சைதாப்பேட்டையில் உள்ள சிறுநீரக கற்களை நீக்கும் மருத்துவமனை. இங்கு ஏராளமான செவிலியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு உடை மாற்றும் அறைக்கு சென்ற ஒரு செவிலியருக்கு ஏதோ கேமரா இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.
உடனே தன்னிடம் இருந்த செல்போனில் கேமராவை கண்டறியும் செயலியை எடுத்து பார்த்துள்ளார். அப்போது கேமரா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது புகாரின் பேரில் மருத்துவமனையில் பணியாற்றும் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

உடைமாற்றும் அறை
இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில் துப்புரவு பணியை சேர்ந்த ஊழியர் என்பதால் எல்லா அறைகளுக்கும் சென்று வருவதற்கு அனுமதி உண்டு. அது போல் ஒரு நாள் நர்ஸ்கள் உடைமாற்றும் அறைக்கு சென்றேன்.

நர்ஸ்
அப்போது ஒரு நர்ஸ் உடைமாற்றிக் கொண்டிருந்தார். அதை பார்த்த எனக்கு சபலம் ஏற்பட்டது. இதையடுத்து அடுத்த நாள் அதே நேரம் சென்று மீண்டும் பார்த்தேன். அப்போது வேறு ஒரு நர்ஸ் உடைமாற்றிக் கொண்டிருந்தார்.

இரவு நேரங்களில்
இதனால் அப்படியே வீடியோவாக செல்போனில் எடுத்தேன். இதை வைத்து அந்த நர்ஸிடம் மிரட்டினேன். அவர் உடனே அவரது கணவரிடம் கூறினார். அவர் வந்து என்னை மிரட்டி அந்த வீடியோவை அழிக்க வைத்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் உடை மாற்றும் அறைக்கு சென்ற நான் இரவு நேரங்களில் எனது செல்போனை வைத்து விட்டு வந்து விடுவேன். பின்னர் பகல் நேரத்தில் அதை எடுத்து பார்ப்பேன் என்றார்.

எந்த ஒரு பெண்ணுக்கு
இதையடுத்து பிரகாஷின் செல்போனில் உள்ள வீடியோக்களை அழிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் எந்த ஒரு பெண்ணுக்கும் பிரச்சினை ஏற்பட கூடாது என்பதில் போலீஸார் உறுதியாக உள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications