கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கோவாக்சின் பரிசோதனை சென்னையில் தொடங்கியது
சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான கோவாக்சின் பரிசோதனை தமிழகத்தில் இன்று முதல் தொடங்கியது.
பாரத் பயோ டெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து பரிசோதனையானது பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை, ஹரியானா பண்டிட் பகவத் தயாள் ஷர்மா மருத்து நிறுவனம், ஹைதராபாத் நிஜாம் நிறுவனம் ஆகியவற்றில் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்திலும் இன்று முதல் கோவாக்சின் பரிசோதனை தொடங்கப்பட உள்ளது. சென்னை அருகே எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் முதல் கட்டமாக கோவாக்சின் பரிசோதனை நடைபெறுகிறது.
இதற்கான தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை தன்னார்வலர்களுக்கு இந்த கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது சோதனை தொடங்கி உள்ளது.
இப்பரிசோதனை முடிவடைய 14 நாட்களாகும். ஏற்கனவே இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து வெற்றிகரமாக இயங்குவதாக தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
நல்ல முன்னேற்றம்.. முதல் தடுப்பூசி மக்களுக்கு எப்போது போடப்படும்.. உலக சுகாதார அமைப்பு பதில்